super star rajinikanth may join director maniratnam in thalaivar-173
super star rajinikanth may join director maniratnam in thalaivar-173

‘எல்லாத்தையும் நிறுத்தனும்’ என (கலெக்டர்) அரவிந்த்சாமி சொல்ல, அதற்கு (சூர்யா) ரஜினி, ‘ முடியாது.. உங்களால முடிஞ்சா தடுத்து பாருங்க.’ என்ற ‘தளபதி’ படத்தை திரை ஆர்வலர்கள் யாரும் மறக்க முடியாது.

‘அது சரி, இப்ப என்ன அதுக்கு.. வேட்டையன் வர்ற நேரத்துல..’ என்கிறீர்களா? விஷயம் இருக்கு; அதாவது..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “வேட்டையன்” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ம் தேதி உலகம் முழுதும் வெளியாக உள்ளது. இப்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “கூலி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான “அபூர்வராகங்கள்” என்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த், இயக்குனர் சிகரம் பாலச்சந்தர், இயக்குனர் மகேந்திரன், எஸ்.பி முத்துராமன் ஆகியோர் ஆக்கங்களில் 50 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வருகிறார்.

மேலும், கடந்த 1991 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியானது ஒரு படம். அந்த திரைப்படத்தின் இயக்குனர் மணிரத்னம். அதுவரை ரஜினியை அனைவரும் பார்த்த விதத்தில் இருந்து வேறொரு கண்ணோட்டத்தில் பார்த்தனர் என்றால் அது மிகையல்ல. அதாவது, ஸ்டைல் இல்லாமல், பன்ச் டைலாக் இல்லாமல் ரஜினியை வைத்து ஒரு படம் எடுத்தார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு இளையராஜா இசையில், மம்மூட்டி, அரவிந்த்சாமி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் தான் “தளபதி”. சுமார் 33 ஆண்டுகள் கழித்தும் அந்த திரைப்படத்திற்கு இன்றளவும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னதாக, உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து “நாயகன்” என்ற திரைப்படத்தை இயக்கிய மணிரத்னம் தான் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை “தளபதி” திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். அதன்பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மணிரத்னத்தோடு இணைந்து திரைப்படமே நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சுமார் 33 ஆண்டுகள் கழித்து, மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இயக்குனர் மணிரத்னம் இணைய உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படமாக இப்படம் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாள் அன்று, இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

தற்பொழுது அவர் நடித்துவரும் ‘கூலி’ திரைப்பட பணிகளை முழுமையாக முடித்த பிறகு, தனது 173 ஆவது திரைப்படமாக மணிரத்னத்துடன் அவர் இணைய வாய்ப்புகள் இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. ஆக, ரஜினி பிறந்த நாளில் எதிர்பார்ப்போம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

படத்தின் கதைக்கரு இராமாயணமா,, மகாபாரதமா? மணி சார்.?