![images (66)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/02/images-66-2-696x391.jpeg)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய கடைசி படம் பற்றி பேசிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்திய திரை உலகில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலிப் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/02/images-67-2.jpeg)
இப்படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் ஒரு படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். ஜெய்வர் படத்தை தொடர்ந்து அடுத்து ரஜினி யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பில் தற்போது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என ஆசைப்படுவதாக தெரியவந்துள்ளது. இது குறித்து லோகேஷ் கனகராஜிடமும் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/02/images-58-2.jpeg)
அது மட்டுமல்லாமல் லோகேஷ் இயக்குவது தான் தன்னுடைய கடைசி படமாக இருக்க வேண்டும் எனவும் ரஜினிகாந்த் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
ரஜினிகாந்தின் ஆசையை லோகேஷ் கனகராஜ் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.