சூப்பர் சிங்கர் டைட்டில் வென்று சொந்த வீட்டுக்கு அதிபதி ஆகி உள்ளார் போட்டியாளர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் கோலாகலமாக தொடங்கி ஒளிபரப்பாகி வந்த நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி ஒளிபரப்பானது.
இந்த இறுதி போட்டியில் அருணா, பிரியா, பூஜா, பிரசன்னா மற்றும் அபிஜித் ஆகியோர் போட்டி போட்டனர். இவர்களில் அருணா டைட்டில் வந்து 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை பரிசாக வென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரியா இரண்டாவது இடத்தையும் பிரசன்னா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.