மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், ஆளும் கட்சியான அதிமுக அரசு தொடுத்த வழக்கில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை நேரில் ஆஜராகிறார்.
இதுகுறித்து சட்டத்துறை தலைவர் மற்றும் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஆளும் அதிமுக அரசு தொடுத்த அவதூறு வழக்கில், அவ்வழக்கை எதிர்கொள்ளும் வகையில் நாளை காலை 9.30 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் , நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக போடப்படும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
எனவே சட்ட ஆலோசகர்கள், சட்ட துறை இணை, மூத்த வழக்கறிஞர்கள், தலைமை கழக வழக்கறிஞர்கள், துணை செயலாளர்கள், திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் அனைவரும் நாளை காலை 9மணிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் வருமாறு சட்டத்துறை சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது” . இவ்வாறு அறிக்கை வெளியிட்டார்.