![images (52)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-52-1-696x391.jpeg)
இரண்டாவது குழந்தைக்கு அம்மாவாகி உள்ளார் ஸ்ரீ தேவி அசோக் குமார்.
தமிழ் சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதேவி அசோக்குமார். குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி சீரியல் இவருக்கு ஒரு பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-53-1.jpeg)
மேலும் இவர் மோதலும் காதலும் சீரியலிலும் நடித்து வந்தார். ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வந்த இவர் பிரசவத்திற்கு ஒரு வாரம் இருக்கும் வரை இந்த சீரியலில் நடித்து வந்தார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/Screenshot_2024-05-23-16-58-20-69_1c337646f29875672b5a61192b9010f9-757x1024.jpg)
இந்த நிலையில் தற்போது இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் கையை புகைப்படமாக எடுத்து வெளியிட்டு இரண்டாவது குழந்தைக்கு அம்மாவானதை அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் ஸ்ரீ தேவிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.