சீதாராமன் சீரியலில் கமிட்டானதாக வெளியான செய்திக்கு ஸ்ரீநிதி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இத சீரியலில் நாயகியாக ரோஜா சீரியல் பிரபலம் பிரியங்கா நல்காரி நடித்து வந்தார்.
சமீபத்தில் அவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து கடைசி நாள் ஷூட்டிங்கில் பங்கேற்ற போட்டோக்களையும் வெளியிட்டு இருந்தார். அதன் பிறகு இந்த சீரியலில் யார் சீதாவாக நடிக்கப்போவது என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
இப்படியான நிலையில் கடந்த சில தினங்களாகவே சீதாராமன் சீரியலில் நாயகியாக தெய்வம் தந்த பூவே சீரியலில் நடித்து வரும் ஸ்ரீநிதி நடிக்க போகிறார் என தகவல் பரவி வந்தது. ஆனால் இது உண்மை இல்லை என ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது அதனை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலமாக ஸ்ரீநிதி உறுதி செய்துள்ளார்.
சீதாராமன் சீரியலில் நான் நடிப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை, நான் புதிய ப்ராஜெக்ட் ஒப்பந்தமானால் நிச்சயமா அதை தெரிவிப்பேன் என விளக்கம் அளித்துள்ளார்.