தமிழ் சினிமாவில் முதல் முறையாக மல்டிபிளக்ஸ் திரையரங்கு பிசினஸை தொடங்க உள்ளார் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி தொகுப்பாளர், காமெடி நடிகர், என படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இடம் பிடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
தற்போது நடிப்பு, தயாரிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் இவர் அடுத்ததாக மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு சொந்தக்காரராக உள்ளார். தமிழ் சினிமாவில் இதுவரை எந்த நடிகருக்கும் சொந்தமாக திரையரங்கம் இல்லாத நிலையில் அந்த வரலாற்றை மாற்றி எழுத உள்ளார் சிவகார்த்திகேயன்.
ஏசியன் சினிமாஸ் என்ற நிறுவனம் தொடர்ந்து நடிகர்களுடன் இணைந்து பல புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை கட்டி வருகிறது. மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களுடன் இணைந்து திரையரங்குகளை கட்டி உள்ள நிலையில் அடுத்ததாக சென்னையில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து திரையரங்கை கட்ட உள்ளதாக ஏசியன் சினிமாஸ் நிறுவனத்தைச் சார்ந்த சுனில் நரங் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.