![images (44)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/03/images-44.jpeg)
ஒரே படத்தில் இரண்டு பாலிவுட் நடிகர்களை வைத்து படத்தை இயக்க உள்ளார் சிறுத்தை சிவா.
தமிழ் சினிமாவில் சிறுத்தை என்ற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிறுத்தை சிவா. இந்த படத்தை தொடர்ந்து இவர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விசுவாசம் மற்றும் விவேகம் என நான்கு படங்களை இயக்கினார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/03/images-45.jpeg)
இந்த படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த என்ற படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து தற்போது சூர்யா நடிப்பில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.
வெகு விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் சிறுத்தை சிவா அடுத்ததாக பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரன்பீர் கபீர் மற்றும் வருண் தவானை வைத்து படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/03/images-43.jpeg)
இந்தத் திரைப்படம் முடிவடைந்த பிறகு மீண்டும் சிறுத்தை சிவா ஆஸ்தான நடிகரான அஜித்துடன் இணைய போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.