மனோஜ்க்கு ரோகிணியால் சிக்கல் உருவாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து வேக வேகமாக ஸ்ருதியின் வீட்டுக்கு வந்து அவருடைய அப்பாவை யாரோ இது உனக்கு என் மேல தான கோவம் எதுவா இருந்தாலும் என்கிட்ட மோது அதை விட்டுட்டு என் தம்பியை ஆள் வைத்து அடித்து இருக்க என்று சத்தம் போட ஸ்ருதி அம்மா உன் தம்பி என் பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான் என்ற உண்மையை உடைக்க முத்து ரவி அப்படிப்பட்ட பையன் கிடையாது நீங்க சும்மா கதை விடாதீங்க என்று சொல்ல அதை உன் தம்பியை சொல்ல சொல்லு என்று கூறுகிறார்.
முத்து ரவியிடம் நீ அப்படி பண்ண மாட்டேனு எனக்கு தெரியும் இல்லனு நீ சொல்லுடா என்று சொல்ல ரவி பதில் ஏதும் பேசாமல் தலை குனிந்து நிற்க முத்து வெளியே வந்து ரவியிடம் இனிமேல் அந்த பொண்ணு கிட்ட பேசாத இதெல்லாம் நமக்கு செட் ஆகாது. அப்படியே நீ திரும்ப பேசினாலும் உன் கைய கால உடைக்கிற முதல் ஆளா நானாகத்தான் இருப்பேன் என்று சொல்லி கிளம்பிச் செல்கிறார்.
பிறகு ரோகிணி மனோஜிடம் அந்தமான் போவதற்கு ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிடு என்று சொல்ல மனோஜ் என்ன செய்வது என தெரியாமல் குழப்பம் அடைகிறார். 20 நாள் வேலை செய்த கார் ஷோரூம் வந்து சம்பளத்தை கேட்க ஒத்த ரூபாய் கூட கொடுக்க முடியாது என துரத்தி விடுகின்றனர். ரோகிணி வேற டிக்கெட் புக் பண்ண சொன்னா என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டுக்கு கிளம்பி வருகிறார்.
ஸ்ருதி ரவிக்கு போன் செய்ய ரவி போனை எடுக்காமல் ஸ்விட்ச் ஆப் செய்துவிட மீனாவுக்கு போன் செய்து நலம் விசாரிப்பது போல பேச மீனா ரவி வீட்டில் தான் இருக்கிறார் என்ற விஷயத்தை உளறுகிறார். நீங்க சமைச்சு கொடுத்த சிக்கன் சூப்பரா இருந்தது சாப்பிடணும் போல இருக்கு என்று சொல்ல மீனா சமைத்து எடுத்து வரேன் என்று சொன்னதும் ரவியோட வாங்க என்று சொல்ல மீனாவும் சரி என்று சொல்கிறார்.
பிறகு ரவி ஹோட்டல் கிளம்ப மீனா நானும் வரேன், ஸ்ருதியோட ஸ்டுடியோவில் விட்டு விடு என்று சொல்ல ரவி வேறு வழியில்லாமல் கிளம்பி செல்கிறார். அடுத்து மனோஜ் வீட்டுக்கு வர விஜயா பார்வதியை பார்க்க வெளியே கிளப்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் விஜயா ஒரு லட்சம் ரூபாய் பணத்தை காணவில்லை என சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைய கடைசியில் எனக்கு தெரிந்து போச்சு இவ தம்பி தான் எடுத்திருக்கணும் என சத்யா மீது பழி தூக்கி போடுகிறார்.