![Screenshot_2024-02-21-08-10-13-91_f9ee0578fe1cc94de7482bd41accb329](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/02/Screenshot_2024-02-21-08-10-13-91_f9ee0578fe1cc94de7482bd41accb329-696x444.webp)
தொக்காக மாட்டியுள்ளார் மனோஜ்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சத்யாவுக்கு அவரது அம்மா சூப் வைத்து கொடுத்து முத்து இப்படி பண்ணுவாரு நினைச்சு பார்க்கல என்று வருத்தப்பட்டு பேச மீனா எதுவும் பேச முடியாமல் கண்ணீருடன் இருக்கிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/02/Screenshot_2024-02-21-08-11-07-18_f9ee0578fe1cc94de7482bd41accb329-jpg.webp)
அண்ணாமலை வீட்டுக்கு சத்யாவை நலம் விசாரிக்க மீனாவின் அம்மா மூத்த பையனா நினைச்ச மாப்பிள்ளை இப்படி பண்ணிட்டாரு, நாங்க என்ன அவருக்கு எதிரியா? இதையெல்லாம் நினைச்சா தான் மனசு கஷ்டமாக இருக்கு என பீல் பண்ணுகிறார்.
அண்ணாமலை முத்து தப்பு பண்ணாமல் யார் மேலயும் கை வைக்க மாட்டான். ஆனால் சத்யா விஷயத்தில் ஏன் இப்படி நடந்துக்கிட்டானு தெரியல. உனக்கும் அவனுக்கும் வேற ஏதாவது பிரச்சினையா என்று சத்யாவிடம் கேட்க அவன் இல்லை மாமா செல்வம் பணம் கொடுக்கலனு கேட்க போனபோது தான் போட்டு அடிச்சிட்டாரு என்று பொய் சொல்கிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/02/Screenshot_2024-02-21-08-11-35-28_f9ee0578fe1cc94de7482bd41accb329-jpg.webp)
பிறகு அண்ணாமலை முத்து செய்த வேலைக்காக மன்னிப்பு கேட்டு பணத்தை கொடுக்க அதை மீனா குடும்பம் வாங்க மறுத்து விடுகிறது. மறுபக்கம் மனோஜ்க்கு கடன் கொடுத்த நண்பர் ஓட்டலுக்கு வர மனோஜ் ஓடி ஒளிகிறார். இருந்தாலும் தொக்காக மாட்டிக் கொள்ள மனோஜிடம் பணத்தை கேட்டு திட்டி விதவிதமான சாப்பாடு வாங்கி சாப்பிட்டு வீட்டுக்கு பார்சல் வாங்கி கொண்டு பில்லை மனோஜ் தலையில் கட்டுகிறார்.
அடுத்து வீட்டுக்கு வந்த அண்ணாமலை படுத்திருக்க விஜயா கொண்டு போன பணத்தை பிடுங்கிக்கிட்டாங்களா என்று கேட்க அண்ணாமலை அவங்க பணத்துக்காக ஆசை படுறங்க இல்லை என் பதிலடி கொடுக்கிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/02/Screenshot_2024-02-21-08-12-15-31_f9ee0578fe1cc94de7482bd41accb329-jpg.webp)
மீனா வீட்டுக்கு வந்து அம்மா பேசியதற்காக மன்னிப்பு கேட்க அண்ணாமலை அவங்க பேசினதுல எதுவும் தப்பு இல்லை என சொல்லி முத்து வந்ததும் ரூமுக்கு கூட்டி போய் ஏண்டா இப்படி இருக்க, சத்யா பாவம். அவங்க அம்மா எவ்வளவு வருத்தப்படுறாங்க என திட்ட முத்து ஆவேசத்தில் உண்மையை சொல்ல போகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.