நகையை வைத்து கலவரத்தை உண்டாக்கியுள்ளார் சுதா. 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா டிவி குறித்து உளற ரோகிணி என்ன சொல்றீங்க என்று கேட்க பிறகு ஒரு வழியாக சமாளிக்கிறார்.

இதையடுத்து மீனா நகையுடன் வர விஜயா, மனோஜ் பதட்டம் அடைகின்றனர். பிறகு மீனாவின் குடும்பத்தினர் வீட்டுக்கு வருகின்றனர். உள்ளே வந்தவர்கள் பாட்டிக்கு வாழ்த்து சொல்லி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகின்றனர். 

பிறகு பாட்டி சீதாவிடம் எப்போ கல்யாணம் என்று கேட்க அவரது அம்மா நல்ல இடமா வந்தா கொடுத்துட வேண்டியது தான் என்று சொல்கிறார். உடனே விஜயா எப்படி உங்க பெரிய பொண்ணு அமைந்த மாதிரியா? அதுக்கு யாராவது ட்ரைன் ஒட்டி அதுல போய் நீங்க யாராவது விழணும் என்று சொல்ல பாட்டி கோபப்பட்டு திட்டுகிறார்.

பிறகு மீனா அவ வேலைக்கு போகட்டும் அவளுக்கு நீ ஒரு வருமானம் இருக்கனும் அப்பதான் போற இடத்துல மதிப்பு கிடைக்கும் இல்லன்னா ஒன்னும் இல்லாதவனு சொல்லிக் காட்டுவாங்க இன்று விஜயாவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கிறார்.

அடுத்ததாக சுதா வீட்டுக்கு வர விஜயா ஓடி ஓடி கவனிக்க மீனாவின் கழுத்தில் செயினை பார்த்த சுதா அது கவரிங் என கண்டுபிடித்து என்ன மீனா முத்து ஒரு நாள் கூட லீவ் போடாம வேலைக்கு போறாரு ஆனா உனக்கு தங்க நகை வாங்கி கொடுக்க முடியலையா என்று நக்கலாக கேள்வி கேட்க எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். 

மனோஜ் உச்சகட்ட பதட்டம் அடைய விஜயா என்ன சம்மந்தி சொல்றீங்க என்று கேட்க ஆமா பார்க்க கவரிங் மாதிரி தான் இருக்கு என்று சொல்ல எல்லோரும் அதை தங்க நகை தான் என்று சொல்கின்றனர். ஆனாலும் சுதா கவரிங் மாதிரி தான் இருக்கு என்று சொல்ல பாட்டி விட்டா ஒரசி காட்ட சொல்லுவீங்க போல என்று கோபப்பட்டு பேச சுருதி உனக்கு என்னமா வந்தது என்று திட்டுகிறார். 

அடுத்ததாக ரவியின் ஸ்ருதியின் ஒருவரை ஒருவர் கலாய்த்து ஓடி பிடித்து விளையாட இதை பார்த்து சுதா கடுப்பாக விஜயா சம்மந்தி வேற பாக்குறாங்க என்று புலம்புகிறார். பிறகு ரூமுக்குள்ள இருந்து ஸ்ருதி வெளியே வந்து இவர்கள் விளையாடுவதை பார்த்து முறைக்க விஜயா பெரிய பிரச்சனை பண்ண போற என்று யோசிக்க கடைசியில் சுருதியும் சேர்ந்து விளையாடுவதை பார்த்து ‌ இன்னமும் ஷாக் ஆகின்றனர். 

அடுத்ததாக கேக் வெட்ட எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து பாட்டியை கூப்பிட முத்து வந்துவிட்டோம் என்று சொல்ல விஜயா வர வரைக்கும் எல்லாரும் காத்துட்டு இருக்க முடியுமா அவன் எந்த கடையில குடிச்சிட்டு விழுந்து கிடக்கிறானோ என்று மக்களாக பேச வீனா அவர் வந்துருவாரு என்று பதிலடி கொடுக்க பாட்டியின் அவன் வந்துருவான் என்று சொல்கிறார். 

அண்ணாமலை கொஞ்ச நேரம் காத்திருக்கலாம் என்று சொன்னதும் ஸ்ருதி அப்போ கிப்ட் கொடுத்துடலாம் என்று சொல்ல முதல் ஆளாக மனோஜ் பாட்டிக்காக வாங்கிய நவரத்தின மாலையை எடுத்து வந்து கழுத்தில் மாட்டிவிட பாட்டி ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.