கடைசி நொடியில் ஸ்ருதியின் உயிரை காப்பாற்றுவார் மீனா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா ரவி உன்ன மாதிரி இல்ல எப்ப பார்த்தாலும் பேமிலி பேமிலினு சொல்லிக்கிட்டே இருக்கான் என்று சொல்ல மீனா கூட்டு குடும்பம் பற்றி எடுத்துச் சொல்கிறார். ஆனாலும் ஸ்ருதி தன்னுடைய பேச்சை உறுதியாக இருக்க இனிமே உங்ககிட்ட பேசி எதுவும் செய்ய முடியாது உங்க வாழ்க்கையே உங்களை பார்த்துக்குங்க என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறார்.
அதற்கு அடுத்ததாக ஸ்ருதி பார்க்கில் இருந்து வெளியே வர பிஜு ஸ்ருதியை தடுத்து நிறுத்தி அவள் முகத்தில் ஆசை வீசப்பாக மீனா செங்கலை எடுத்து பாட்டில் மீது வீச பாட்டில் கீழே விழுந்து நொருங்குகிறது. அடுத்து செங்கலை எடுத்து எல்லாரையும் அடித்து ஓட விடுகிறார்.
அதன் பிறகு சுருதி பயத்தின் அப்படியே இரண்டு போய் நிற்க மீனா அவரை தேற்றி வீட்டிற்கு அழைத்து வந்து காபி போட்டு கொடுத்து இதுதான் கூட்டுக் குடும்பம் உறவுகள் சுத்தி இருந்தால் வாழ்க்கையும் நல்லா இருக்கும் பாதுகாப்பாகவும் இருக்கும். நான் மட்டும் அங்க இல்லனா என்ன நடந்திருக்கும் இன்று எடுத்து கூறி சுருதிக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறார்.
மேலும் வீட்டுக்கு வந்துடுங்க என்று சொல்லி கூப்பிட அங்கு உங்க ஹஸ்பண்ட் முத்து இருப்பார், ரெஸ்டாரண்ட்ல என்ன பேச்சு பேசினார் என்று சொல்ல அவர் பலாப்பழம் மாதிரி பார்ப்பதற்கு தான் முரடா இருப்பாரு ஆனா ரொம்ப தங்கமான மனுஷன் வீட்டுக்கு வந்து நான் உங்களுக்கே புரியும் என்று சொல்கிறார்.
அதனைத் தொடர்ந்து ரவி வீட்டுக்கு வர சுருதி அவரை கட்டிப்பிடித்துக் கொண்டு எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று சொல்ல அதான் ஒன்னும் ஆகல இல்ல, அவர் மட்டும் என் கையில கிடைச்சா சும்மா விட மாட்டேன் என்று ஆவேசப்படுகிறார். அதற்கு அடுத்ததாக ரவி மீனாவுக்கு நன்றி சொல்கிறார்.
மறுபக்கம் ஸ்ருதியின் அம்மா தனது மகளின் போட்டோவை பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அவருடைய கணவர் அவளை நான் எப்படியோ தலை முழுகிட்டேன் இனி நாம் இரண்டு பேர் தான் அவளை பத்தி யோசிக்காத என சொல்ல அப்போது மீனா வீட்டுக்கு வர இருவரும் கோபப்படுகின்றனர்.
எங்களுக்கு மரியாதை கிடைக்காதுன்னு தெரியும் இருந்தாலும் நான் சில விஷயங்கள் பேசறதுக்காக வந்தேன் என்று சொல்லி ஸ்ருதிக்கு நடந்த விஷயத்தை சொல்ல அவரது அம்மா பதறுகிறார். என் பொண்ணுக்கு எதுவும் ஆகல என்று சொல்லி கேட்க மீனா ஒன்னும் ஆகல நான் இருக்கவே அவங்கள காப்பாத்திட்டேன் இல்லனா என்ன ஆகியிருக்கும் என கூறுகிறார்.
ஸ்ருதியின் அப்பா அதை ஒன்னும் ஆகல அவளை பத்தி நமக்கு என்ன கவலை என்று சொல்ல மீனா நீங்க பார்த்து வச்ச மாப்பிள்ளை அவ கிடைக்கலனு அவளையே அழிக்க பார்த்தான். ஆனா அவ விரும்பினவனை கட்டிக்கிட்டு ஸ்ருதி சந்தோஷமா தான் இருக்கா என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.