![Screenshot_2024-01-22-07-06-15-31_f9ee0578fe1cc94de7482bd41accb329](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/Screenshot_2024-01-22-07-06-15-31_f9ee0578fe1cc94de7482bd41accb329-696x395.webp)
முத்துவால் மீனா வெக்கப்பட்டு நிற்க ரோகினியிடம் மாமா பற்றி கேட்டு பாடு படுத்தி உள்ளார் விஜயா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாவும் முத்துவும் குடைக்குள் டார்ச் லைட் வைத்து இரவு முழுவதும் பாட்டு பாடி ரொமான்ஸ் செய்கின்றனர்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/Screenshot_2024-01-22-07-07-21-66_f9ee0578fe1cc94de7482bd41accb329-jpg.webp)
அதன் பிறகு மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் கையில் குடையுடன் வந்து மீனாவிடம் பேச பாட்டி வந்து துரத்தி விடுகிறார். பிறகு பாட்டி உள்ளே போனதும் திரும்பவும் கோடி வரும் அந்த பெண்கள் எங்களுக்கு ஒரு டவுட் என முத்துவையும் கூப்பிட்டு இந்த குடையெல்லாம் ஓகே குடைக்குள்ள லைட் எப்படி வந்தது என்று கேட்கின்றனர். நீ நான் எல்லாம் உங்களால தான் என்று கிட்ட அதனால என்ன என்று முத்து கேட்க எனக்கு வெக்கமா இருக்கு என மீனா உள்ளே ஓடுகிறார்.
அதன் பிறகு மீனா கோலம் போட்டு கொடுக்க முத்துவும் செல்வமும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஓடி வரும் விஜயா ரோகினியோட மாமா வராருல வெல்கம்னு எழுது என சொல்கிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/Screenshot_2024-01-22-07-07-44-08_f9ee0578fe1cc94de7482bd41accb329-jpg.webp)
மேலும் ஆரத்தி கரைச்சு வை, என்ன நீ பொருள் எல்லாம் அப்படி இப்படி அங்கங்க போட்டு வச்சிருக்க வருவது இதெல்லாம் பார்த்தா என்ன நினைப்பாரு விஜயா பார்த்தது கிடைக்கும் பொருட்களை எடுத்து சுத்தம் செய்ய தவறி கீழே விழ அண்ணாமலை தாங்கி பிடிக்கிறார்.
பிறகு ஸ்ருதியின் ரவியின் தூங்கி எழுந்து வெளியே வந்து காபி கேட்க மீனா நீ இன்னும் காபி கொடுக்கலையா என கேட்க அந்த காலையிலேயே எல்லாருக்கும் காபி போட்டு கொடுத்தது என்று சொல்ல சுருதி நான் தூங்கிட்டு இருந்தேன் தூங்கிட்டு இருக்க உங்களுக்கு எப்படி காபி கொடுப்பாங்க என சொல்கிறார்.
பிறகு மனோஜ் ரோகிணி எழுந்து வெளியே வர விஜயா ரோகிணியின் அம்மா பற்றி ஓவர் பில்டப் கொடுத்து பேசிக் கொண்டிருக்க ரோகிணி அந்த மனுஷன் வந்துடுவாரா இல்லையான்னு தெரியலையே என தவிக்கிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/Screenshot_2024-01-22-07-07-00-78_f9ee0578fe1cc94de7482bd41accb329-jpg.webp)
பிறகு தனியாக வந்து கறி கடக்காருக்கு போன் போட்டு எங்க இருக்கீங்க என் மாமியார் வேற நிமிஷத்துக்கு நிமிஷம் உங்களுக்கு கேட்டுக்கிட்டே இருக்காரு என்று சொல்ல நான் காலையில அஞ்சு மணிக்கு வந்துட்டேன் நீங்க சொன்ன ஊருக்கு எட்டு கிலோமீட்டர் முன்னாடி தான் காத்துகிட்டு இருக்கேன். இந்த மாதிரி பில்டப் எல்லாம் கொடுத்து என்ட்ரி கொடுத்தால் தானே சரியா இருக்கும் என சொல்கிறார்.
நீங்க ஆக்சன் சொல்ல ரெடியா இருங்க நான் எப்படி கேரக்டரை நடித்து காட்டறேன்னு மட்டும் பாருங்க என சொல்லி போனை வைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.