மீனாவால் உடைந்து போய் உள்ளார் அண்ணாமலை.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா தான் சாட்சி கையெழுத்து போட்டு இருப்பதாக போலீசார் முத்து அப்படியெல்லாம் இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார். உடனே போலீஸ் அந்த ரெஜிஸ்டர் நோட்டை எடுத்துக்காட்டு இது அவங்க கையெழுத்து தானே என்று கேட்க அதிர்ச்சி அடையும் முத்து மீனாவிடம் கையெழுத்து போட்டியா என்று கேட்க மீனா தலையை ஆட்ட இந்த நம்பி தானே எல்லாத்தையும் விட்டுட்டு போன இப்படி நம்பிக்கை துரோகம் பண்ணிட்டியே என் கண்ணு முன்னாடி நிக்காத உன்னை கொன்னுட்டு நானும் ஜெயிலுக்கு போயிடுவேன் என்று பளார் என்று அறைத்து கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார்.
ஸ்ருதியின் அப்பா புள்ளைய நான் நல்லபடியா வளர்த்து இருக்கேன் என்று திமிரா சொன்னியே இதுதான் உன்னுடைய வளர்ப்பா என்று அண்ணாமலையை பார்த்து காரி துப்பி விட்டு கிளம்புகிறார்.
முத்து தன்னுடைய அப்பாவிடம் போய் அப்பா என்ன பாருப்பா என்று கெஞ்சி கண் கலங்க அண்ணாமலை முகத்தை திருப்பாமல் சோகமாகவே நிற்க முத்து இன்னும் உடைந்து போகிறார். இன்னொரு பக்கம் விஜயா உட்பட எல்லோரும் மீனாவை பிடித்து திட்டி தீர்க்கின்றனர்.
இன்னொரு பக்கம் சுருதி தோழியின் கெஸ்ட் ஹவுஸ்க்கு வந்ததும் ரவி வருத்தமாக இருக்க அத பத்தி எல்லாம் கவலைப்படாத மீனா சின்ன குழந்தையா அவங்களை அவங்க பார்த்துப்பாங்க. இந்த நாள நம்ம சந்தோஷமா இருக்கணும் என்று சொல்லி பேச ரவி மீனாவை பற்றிய சிந்தனையிலேயே இருக்கிறார்.
அடுத்து முத்து அப்பாவுக்காக சாப்பாடு வாங்கிட்டு வர கிளம்ப மீனாவை பார்த்து இங்கிருந்து போயிடு என விரட்டி அடிக்கிறார்.இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.