Sirakadikka Aasai Episode Update 21.06.23
Sirakadikka Aasai Episode Update 21.06.23

மீனா வேலைகளை எல்லாம் லிஸ்ட் போட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை பணம் வேண்டும் என்றால் வேலை செய்து தான் ஆக வேண்டும் என சொல்ல விஜயா செய்வதறியாது நிற்கிறார். பிறகு அண்ணாமலை பணம் வேணுமா வேணாமா என சைகையில் கேட்க விஜயா மனோஜ்க்காக இது எல்லாம் செஞ்சு தான் ஆகணும் என மனதுக்குள் பேசிக்கொண்டே உள்ளே செல்கிறார்.

நல்ல மருமகளா எப்படி நடந்து கொள்வது என விஜயா யோசித்து கொண்டு இருக்க முத்து அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போயிடுச்சா கொஞ்ச நாள் தான் உயிரோடு இருப்பாங்கனு டாக்டர் சொல்லிட்டாரா அதனால தான் இந்த மாற்றமா என அண்ணாமலையிடம் கேட்க உங்க அம்மா உடம்பு சரியில்லாத மாதிரியா இருக்கா? சென்னைக்கு நடந்தே போயிடுவா அது இல்ல என்று சொல்ல முத்து உள்ளே வந்து விஜயாவை சுற்றி சுற்றி வருகின்றார்.

விஜயா என்னடா என்று கேட்க உங்களுக்கு இந்த ஊர்ல பிரண்டு யார்னா இருக்காங்களா என்று கேட்க இல்லை என சொல்கிறார். அப்போ உண்மையாகவே இங்கதான் வந்தீங்களா என்று கேட்க ஆமாம் என்று சொல்ல உங்க புள்ள மனோஜ் மேல சத்தியமா என்று முத்து சத்தியம் கேட்க விஜயா போடா என்ன சொல்லிவிட்டு ரூமுக்கு சென்று மீனாவிடம் நீ எப்படி நல்ல மருமகள்னு பேர் எடுத்த? என்னென்ன வேலை எல்லாம் செய்த என்று கேட்க மீனா அதெல்லாம் எதுக்கு அத்தை என்று சொல்கிறார்.

இல்ல சொல்லு நானும் வேலை செய்யணும் என்று கேட்க மீனா எல்லாத்தையும் நான் பண்ணி விடுறேன் என்று சொல்ல வேண்டாம் உனக்கு கால்ல அடிபட்டு இருக்கு அதுவும் இல்லாம ரொம்ப நாள் கழிச்சு நான் இந்த ஊருக்கு வந்து இருக்கேன். பாட்டிக்கும் வயசாயிடுச்சு நான் ஏதாவது வேலை பண்ணா அவங்களும் சந்தோஷப்படுவாங்க என்று சொல்லி கேட்க மீனா காலையில் இருந்து நைட் வரைக்கும் என்னென்ன வேலைகளை செய்ய வேண்டும் என லிஸ்ட் போட விஜய்யா அதைக் கேட்டு டயார்டு ஆகிறார்.

இன்னைக்கு செய்ய வேண்டிய வேலையை சொல்லுனா ஒரு வாரத்துக்கு சொல்ற என்று கேட்க இதெல்லாம் இன்னைக்கு செய்ய வேண்டியது தான் அத்தை, சில வேலைகளை நான் சொல்ல மறந்துட்டேனு சொல்ல விஜயா இன்னும் அதிர்ச்சி அடைகிறார். இந்த நேரம் பார்த்து முத்து ரூமுக்கு வந்து நீங்க என்ன புதுசா கூட்டு சேர்ந்து பேசிட்டு இருக்கீங்க என்று கேட்க மீனா அத்தை என்னன்னு வேலை செய்யணும்னு கேட்டாங்க அதை தான் சொல்லிக்கிட்டு இருந்தேன் என சொல்ல முத்து அம்மா இதெல்லாம் செய்ய போறாங்களா என்று குழப்பம் அடைகிறார்.

உடனே அப்பாவை கூப்பிட்டு விஷயத்தை சொல்ல அவர் அப்படியா என்று சாதாரணமாக கேட்க இதெல்லாம் ஷாக்கான விஷயம் சாதாரணமாக அப்படியானு கேட்கிறீங்க என்று முத்து சொல்கிறார். மறுபக்கம் ரவியும் சுருதியும் ஃபோனில் ஒருவரை ஒருவர் பற்றி விசாரிக்க பிறகு பேசிக் கொண்டிருக்கும் போது சுருதி தன்னுடைய அசிஸ்டன்ட் இடம் ஒரு கிப்ட் கொடுத்து ரவிக்கு கொடுக்க அதைப் பிரித்துப் பார்த்த ரவி அதில் வேர்ல்ட் பெஸ்ட் செஃப் என இருப்பதை பார்த்து சந்தோஷப்படுகிறான்.

அதன் பிறகு சீதா மனோஜ் கல்யாணம் பற்றி அம்மாவிடம் பேச அவர் மீனாவுக்கு முத்து மாப்பிள்ளையா கிடைத்தது ரொம்ப நல்ல விஷயம், மனோஜ் கூட கல்யாணம் நின்னு போனது நல்லது தான் என்று சொல்ல சீதா மாமா ரொம்ப நல்லவர் ரவியும் நல்லவன் தான் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ரவி வீட்டுக்கு வருகிறார்.

பிறகு ரவி இருவருக்கும் தோசை செய்து தந்து அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க விஜயா போன் செய்து எங்க இருக்க என்று கேட்க ரவி அண்ணி வீட்டில் இருப்பதாக சொல்ல விஜயா அங்கே எதுக்கு போன? சீதா போன் பண்ணி வர சொன்னாளா? என்று கோபப்பட ரவி நான் அப்புறம் பேசுறேன் என்று போனை வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறான்.

இங்கே மறுநாள் காலையில் விஜயா மீனா பெருக்கி கொண்டிருக்கும்போது தொடப்பத்தை வாங்கி நான் பெருக்குகிறேன் என பெருக்கிக் கொண்டிருக்க அப்போது அண்ணாமலை வந்து மீனாவை கூப்பிட்டு இந்த நாளை டைரில எழுதி வை என்று சொல்ல மீனா எதுக்கு மாமா என்று கேட்க இதெல்லாம் வரலாற்று சிறப்புமிக்க விஷயம் என்று சொல்ல விஜய்யா தொடப்பத்தை தூக்கிப்போட்டு முறைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் பிடிவடைகிறது.