பாட்டி கேட்ட கேள்வியால் அதிர்ந்து போய் உள்ளார் ரோகினி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ரோகினியும் அம்மாவும் கிரிஷ் ஆட்டோவில் வந்து கொண்டிருக்க ஆட்டோ ரிப்பேர் ஆகி வழியில் நிற்க அப்போது பஸ் ஸ்டாண்டுக்கு இறங்கி நடந்து வருகின்றனர்.

அந்த நேரம் பார்த்து மீனா எதிரில் வர அவரைப் பார்த்த க்ரிஷ் ஓடிப் போய் மீனா ஆண்ட்டி என கட்டிப்பிடித்துக் கொள்ள பிறகு மீனா இருவரையும் விசாரித்து தனக்கு தாலி பிரித்து போடும் பங்க்ஷன் இருப்பதாக சொல்லி வீட்டுக்கு அழைத்து வருகிறார். மீனா இவர்களுடன் வீட்டுக்கு வர விஜயா யாருன்னு புரியாமல் நிற்க பாட்டி வரவேற்று நலம் விசாரித்து பிறகு அண்ணாமலை இடம் இவங்க தான் மீனாவை காப்பாற்றியது என்ற விஷயத்தை சொல்ல அவரும் நலம் விசாரிக்கிறார். பிறகு மீனா இவர்களை ரூமுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார்.

கொஞ்ச நேரத்தில் ரோகினி வந்த இறங்க விஜயா அவரை வீட்டிற்குள் அழைத்து சென்று பாட்டியிடம் அறிமுகம் செய்து பெருமை பேசுகிறார். உங்க பையன் தான் மருமகள்னு ஒருத்திய கூட்டிட்டு வந்தாலே என்று நக்கலாக பேச பாட்டி ரோகினியை பார்த்து இவ என்ன உடம்பு பார்த்துக்க மாட்டாளா? புள்ளி மெத்தை மாதிரி இருக்கா என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதன் பிறகு விஜயா என்ன வீட்டுக்கு வந்த பொண்ணு கிட்ட இப்படி எல்லாம் பேசுறீங்க அவமானத்துக்கு கஷ்டப்படாத என்று கேட்க வரப்போற மருமகள் கஷ்டப்படும்னு பாக்குறீங்க வீட்டுக்கு வந்த மருமகள் மனசு கஷ்டப்படும்னு யோசிக்க மாட்டியா என பதிலடி கொடுக்கிறார். பிறகு என்னிடம் நீயும் ஏன் பேத்தி மாதிரி தான் நான் சொன்னதை மனதில் வைத்துக்கொள்ளாதே என்ன சொல்ல விஜய்யா மனோஜுடன் ரூமுக்குள் அனுப்பி வைக்கிறார். பிறகு குலோப் ஜாமுன் எடுத்து வந்து கொடுக்க ஸ்பூன் இல்லாததால் டைனிங் டேபிள் இருக்கும் எடுத்துக்கமா என்று சொல்லி விஜயா வெளியே வந்து விடுகிறார்.

இந்த நேரம் பார்த்து திருச்சிக்கு சாப்பாடு ஊட்டிய ரோகிணியின் அம்மா தட்டை கிச்சனில் வைக்க வெளியே வர ரோகிணியும் டைனிங் டேபிள் இருக்கும் ஸ்பூனை எடுக்க வெளியே வருகிறார். இருவரும் சந்தித்துக் கொள்வார்களா என்று பில்டப் என்கிற சந்திக்காமல் போகின்றனர். அதன் பிறகு மீனாவின் குடும்பம் வர விஜயா அவர்களைப் பார்த்து ஏளனமாக பேச மீனாவின் தம்பி பதிலடி கொடுக்கிறான்.

இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் வீட்டுக்கு வந்த முத்து ரோகிணியை பார்த்து ஏய் பிராணு நீ எப்படி இங்கே எனக்கு கேட்க எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.