மீனாவிடம் பொய் சொல்லி ஏமாற்றியுள்ளார் ரவி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மீனா மற்றும் முத்து என இருவரும் போனில் பேசிக்கொள்கின்றனர். முத்து உன் குரலை கேட்டுட்டு இருந்தா தூங்கிடுவேன் என்று சொல்ல மீனாவும் பேசிப்பேசி முத்துவை தூங்க வைக்கிறார்.
அடுத்து சீதா வீட்டுக்கு வர அவரது அம்மா எங்க அம்மா போயிருந்த என்று கேட்க ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்ததாக பொய் சொல்லி சமாளித்து பிறகு அம்மாவை கோவிலுக்கு அனுப்ப முடிவு செய்து பணம் கட்டி இருப்பதாக கூறுகிறார்.
மறுபக்கம் சுருதி தன்னுடைய அம்மாவிடம் அந்த ரவி என்னை ஏமாத்திட்டான் அவங்க அப்பா என்கிட்ட பேச வேணாம்னு சொன்னதுனால என்னை ஏமாற்றிட்டான் என்று சொல்லி அழுது புலம்பி டிராமா போட அவர்கள் அதுக்குத்தான் அவன் வேணான்னு ஆரம்பத்திலேயே சொன்னோம் என கூறுகின்றனர். பிஜூ உனக்கு ஏற்ற மாப்பிள்ளை என்று சொல்ல அத நான் அவரோட ஷாப்பிங் போன அன்னைக்கே புரிஞ்சுகிட்டேன் என சொல்கிறார்.
பிறகு இந்த கல்யாணத்துக்கு பிஜியும் வருவதாக சொல்லிக் கொண்டிருக்க வீட்டுக்கு வந்த அவர் ஸ்ருதிக்கு மோதிரத்தை போட்டுவிட்டு திரும்பவும் மறுநாள் வந்து ஸ்ருதியை பிக்கப் செய்து கொண்டு கிளம்புகிறார். இங்கே ரவி மீனாவிடம் பொய் சொல்லி ஸ்ருதியிடம் எடுத்துப் பேசி அவளுக்கு புரிய வையுங்க என கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.