ரோகினியை பிஏ மிரட்ட முத்துவுக்கு ஷாக் கொடுத்துள்ளார் மீனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ரோகிணி வீட்டுக்கு வந்த பி ஏ உன்னை பத்தி எல்லா விஷயமும் எனக்கு தெரிஞ்சிருச்சு என சொல்லி மிரட்ட ரோகினி பயந்து போகிறார். அந்த சமயம் பார்த்து மனோஜ் வீட்டுக்கு வந்து விட ரோகினிக்கு இன்னும் பயம் அதிகமாகின்றது.

பிறகு உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமே ஆகல ஆனா நீங்க கல்யாணமான மாதிரி நடிச்சு இருக்கீங்க இந்த விஷயம் மட்டும் மேடமுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா என்று மிரட்ட மனோஜ் அதெல்லாம் உங்க மேடம்க்கு எப்பவோ தெரியும் என சொல்லி ஷாக் கொடுக்கிறார். பிறகு இருந்தாலும் இந்த பொன்னையா கல்யாணம் பண்ணிக்க போறீங்க மசாஜ் பண்ண வீடு வீடா போறா, மசாஜ் மட்டும்தான் பண்றாளா இல்ல ஆம்பளையோடு சேர்ந்து என அசிங்கமாக பேச மனோஜ் அவரை பளார் என அறைந்து வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார்.

பிறகு ரோகிணி மனோஜை கட்டிப்பிடித்து கண்கலங்க நான் உன் கூட எப்பவும் இருப்பேன் என ஆறுதல் கூறுகிறார். மறுபக்கம் மீனா கோலம் போட்டுக் கொண்டிருக்க அண்ணாமலை வீட்டுக்கு வர அவரை வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்று உட்கார வைத்து பேசும்போது முத்து மனோஜ்க்கு கல்யாணம் நடக்காது பணத்தை கொடுக்காமல் கல்யாணத்தை நடத்த விட மாட்டேன் என கோபப்பட பாட்டி கொஞ்சம் அமைதியா இரு என அமைதிப்படுத்துகிறார்.

கொஞ்ச நேரத்தில் பாட்டியின் நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் நபர் வந்து லாபம் நல்லா வந்திருக்கு என சொல்லி ஐம்பதாயிரம் பணத்தை சேர்த்து இரண்டு லட்சமாக கொடுக்கிறார். அந்த பணத்தை பாட்டி மீனா கையால் வாங்க வைத்து அதை பீரோவில் வைக்க சொல்ல மீனா சந்தோஷப்படுகிறார்.

பிறகு முத்து தன்னுடைய நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கும்போது மீனா ஊருக்கு வந்ததும் எல்லாத்தையும் புதுசா பார்த்து ஜாலியா சந்தோஷமா இருந்ததை பற்றி ஹாப்பியாக சொல்ல இதை பின்னாடி இருந்து மீனா கேட்டு ரசிக்கிறார்.

பிறகு எல்லோரும் கோவிலுக்கு செல்ல அங்கு முத்து இந்த கல்யாணத்தை நடக்க விடமாட்டேன் என சத்தம் போட மீனா கொஞ்சம் சும்மா இருங்க என முத்துவை அதட்டி அமைதியாக்குகிறார். பிறகு கோவிலில் பத்திரிக்கை வைத்து பூஜை செய்து அண்ணாமலை முதல் பத்திரிக்கையை தனது அம்மாவுக்கு கொடுக்கிறார்.

பிறகு பாட்டி மீனாவிடம் முத்துவை கூட்டிட்டு போய் பிரகாரத்தை சுத்திட்டு வா என சொல்ல முத்து அதெல்லாம் எதுக்கு என கேட்க மீனா அதான் சொல்றாங்களா வாங்க என அதட்ட முத்துவும் எதுவும் சொல்ல முடியாமல் பின்னாடி செல்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.