முத்து காரை இழந்து தவிக்க விஜயாவுக்கு அண்ணாமலை அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி டிராமாவை நம்பி விஜயா கண் கலங்கி நிற்கிறார். மேலும் உனக்கு பழைய புடவை கட்டணும்னு தலையெழுத்தா என்ன? நான் நாளைக்கு உனக்கு போன் பண்றேன், கடைக்கு போகலாம் என போனை வைத்து விடுகிறார்.

அடுத்ததாக முத்துவை வீட்டுக்கு அழைத்து வர அண்ணாமலை என்னாச்சு என பதற ரவி நடத்த விஷயங்களை சொல்ல விஜயா எல்லாம் மீனா வந்த நேரம் என் பேச சீதா கோபப்படுகிறார். முத்துவும் இதுக்கு அவ என்ன பண்ணுவா? என சப்போர்ட் செய்து பேசுகிறான். அதன் பிறகு காரை வெளியே எடுக்க 1 லட்சம் பணம் வேண்டும் என்று சொல்ல முத்து பணத்தை தயார் செய்ய வெளியே கிளம்புகிறார்.

தடுத்து நிறுத்தும் அண்ணாமலை விஜயாவிடம் அம்மா கொடுத்த பணத்தில் இருந்து 1 லட்சம் ரூபாய் எடுத்து வந்து கொடுக்க சொல்ல விஜயா முடியாது, அது என் புள்ள கல்யாணத்துக்கு தேவை என அதிர்ச்சி கொடுக்கிறார். இதனால் அண்ணாமலை கோபப்பட்டு விஜயாவை அதட்டி பணம் எடுத்து வந்து கொடுக்க சொல்ல மனோஜூம் பணத்தை எடுத்து வந்து கொடுக்க சொல்ல விஜயா கொடுக்கிறார்.

அதோடு ஸ்டேஷனுக்கு வயுங் இவர்கள் பணத்தை கொடுத்து காரை எடுக்க முயல கார் ஸ்டார்ட் ஆகவில்லை, மெக்கானிக் கூப்பிட்டு பார்க்க வண்டி கண்டமாகி இருக்கு, செட்டுக்கு தான் எடுத்து போகணும் என்று சொல்ல முத்து கோபப்படுகிறார், போலீஸிடம் சண்டை போட போக மீனா, ரவி ஆகியோர் தடுத்து நிறுத்தி காரை செட்டுக்கு தள்ளி செல்கின்றனர்.

மீனா சாப்பிடாத விஷயம் அறிந்து முத்து சாப்பிட வேண்டியது தானே என்று கேட்க நீங்களும் தான் சாப்பிடல என சொல்கிறார். பிறகு வீட்டுக்கு வந்து கார் நிலவரம் பற்றி சொல்ல விஜயா அதை கையலாங் கடைக்கு தூக்கி போட வேண்டியது தானே என சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.