அண்ணாமலையால் வீட்டுக்கு வந்த மீனாவிடம் முத்து கோபத்தை காட்டியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மீனாவின் அம்மா வீட்டுக்கு போய் அண்ணாமலை அண்ணனை பார்த்துக்கோ என்று பேசிக் கொண்டிருக்க முத்து வீட்டுக்கு வருகிறார்.
மீனாவின் அம்மா மன்னிப்பு கேட்க நீங்க என்ன தப்பு பண்ணீங்க மன்னிப்பு கேட்க என்று சொல்லி நம்புனவங்க தப்பு பண்ணிட்டாங்க என சொல்கிறார். பிறகு சரி கிளம்பு போலாம் என்று சொல்ல மீனா எங்கே என்று கேட்க வீட்டுக்கு தான் அப்பா மாத்திரை போடாம உக்காந்துட்டு இருக்காரு. நீ வந்தா தான் மாத்திரை போடுவேன்னு சொல்லுவாரு நீ வரியா இல்லையா என்று கேட்க வீட்டில் இருப்பவர்கள் மாமா கூப்பிடலாம் போ என்று சொல்லி அனுப்பி வைக்க உங்களுக்காக ஒண்ணும் வரல மாமாவுக்காக வரேன் என்று சொல்லி மீனா கிளம்பி செல்கிறார்.
வீட்டுக்கு வந்ததும் அண்ணாமலை வீணாக உள்ள வா மா, இது உன் வீடு நீ இங்க தான் இருக்கணும் என்று சொல்ல அண்ணாமலை காலில் விழுந்து மீனா மன்னிப்பு கேட்கிறார். சத்தியமா நான் தப்பு பண்ணல என்று சொல்கிறார். அங்க கல்யாணம் நடக்க போகுதுன்னு எனக்கு தெரியாது சுத்தி கிட்ட பேசி மனச மாத்துங்கன்னு சொல்லி தான் கூட்டிட்டு போனாரு என்று சொல்ல அண்ணாமலை நீ கோவிலுக்கு போறேனே பொய் சொல்லிட்டு போனியே அதுதான் எனக்கு வருத்தம் என்று கூறுகிறார். அதற்கு நான் எந்த காரணத்தையும் சொல்ல விரும்பல அது என்னோட தப்பு தான் என மன்னிப்பு கேட்கிறார்.
பிறகு அண்ணாமலைக்கு மாத்திரை கொடுத்து கவனித்துக் கொள்கிறார். ரூமுக்குள் முத்து அப்பா கூப்பிட்டதினால் தான் உன்ன கூப்பிட வந்தேன் மத்தபடி உன்னால எனக்கு கோபம் கொஞ்சம் கூட குறையல என்கிட்ட உரிமை கொண்டாடுற விஷயம் வேண்டாம் என சொல்கிறார்.
இதைக் கேட்டு விடும் அண்ணாமலை பிறகு முத்து காயத்திற்கு மருந்து போடும்போது மீனா கிட்ட கோபத்தை காட்டாத, நிச்சயமா அவ தப்பு பண்ணி இருக்க மாட்டா நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும் என அறிவுரை கூறுகிறார்.
மறுநாள் காலையில் மீனா ஒரே உருளைக்கிழங்கு செய்திருக்க விஜயாவும் ரோகிணியும் இதெல்லாம் கொலஸ்ட்ரால் இதனால் கூட மாமாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கலாம் என்று சத்தம் போட மாமாவுக்கு நான் தனியா கஞ்சி வச்சிருக்கேன் என அவர்களுக்கு பதிலடி கொடுக்கிறார். அவருக்கு பிடிக்கும்னு செஞ்சதாக சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.