SiragadikkaAasai Serial Today Episode Update
SiragadikkaAasai Serial Today Episode Update

முத்து மற்றும் மீனா அவை அசிங்கப்படுத்தி பேசி உள்ளனர் ரோகினியின் அம்மா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் ரோகிணியின் அம்மாவையும் பையனையும் கொலுவிற்கு அழைக்க முதலில் மறுத்த ரோகினி அம்மா சரி வரேன் என்று சம்மதிக்கிறார் ரூமில் வந்து ரோகினிக்கு போன் போட நினைக்க மறுப்பக்கம் மனோஜ் கடையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த ரோகினி டென்ஷன் ஆகி பிசினஸ் டைம்ல எப்படி தூங்கிட்டு இருக்க என்று சொல்ல அதற்கு மனோஜ் எல்லாம் உன் மேல தான் நான் டான்ஸ் ஆட மாட்டேன்னு சொன்னேன் நீ தான் பாட சொல்லி என்ன டயர்டா கிட்ட என்று சொல்ல போய் முகம் கழுவிட்டு வா மனோஜ் என்று அவரை அனுப்பி வைக்க உடனே ரோகிணியின் அம்மா போன் பண்ணுகிறார். என்ன விஷயம் என்று கேட்க எனக்கு பயமா இருக்குடி என்று சொல்ல உனக்கு உடம்பு முடியலையா என்று கேட்கிறார்.

அதெல்லாம் ஒன்னும் இல்ல முத்துவும் மீனாவும் இங்க வந்திருக்காங்க என்று சொல்ல அதுங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று கோபப்படுகிறார். மேலும் உங்க வீட்ல கொலு வச்சிருப்பதாகவும் அதற்கு கூப்பிட வந்திருக்கிறார்கள் என்று சொல்ல சிறிது நேரம் யோசித்த ரோகிணி சரி கிளம்பி வாங்க என்று சொல்லிவிடுகிறார். நிஜமாவே நாங்க வரட்டுமா என்று கேட்க அங்க வந்து நான் சொல்றதை மட்டும் சொல்லுங்க என்று ரோகினி அம்மாவிடம் சில விஷயங்களை சொல்லுகிறார்.

பிறகு கொலு ஏற்பாடுகளை விஜயா செய்து கொண்டிருக்க அண்ணாமலை இடம் இந்த மீனா பண்றது ஒன்னும் சரியில்ல கொலு வைக்கும் போது எல்லா வேலையும் நான் பாத்துக்குறேன்னு சொல்லிட்டு ஆளையே காணோம் என்று சொல்லுகிறார் எட்டு நாளும் அவதான் விழுந்து விழுந்து செஞ்சா அது ஒருநாள் செய்ய கஷ்டமா போ என்று அனுப்பி வைக்கிறார். பிறகு ரோகிணி சக்கரை பொங்கல் கிண்டி கொண்டிருக்க வித்யா அவரிடம் இன்னைக்காவது முத்துவோட போனை எடுத்திடுவியா என்று சொல்ல அது ஒரு பக்கம் இருக்கட்டும் அதைவிட ஒரு பெரிய பிளான் போட்டு இருக்கேன் இன்னிக்கா அவங்க அசிங்கப்பட போறாங்க என்று சொல்லுகிறார் என்னடி சொல்ற என்ன பிளான் என்று கேட்க நீயே பார்ப்ப என்று சொல்லிவிட்டு போகிறார். பிறகு முத்து என்று கொடுக்க எங்கடா போயிருந்த என்று சொல்ல ஒரு கெஸ்ட் கூப்பிட போயிருந்தேன் என்று சொல்லுகிறார்.

யாராவது சினிமா நடிகர்களா என்று கேட்க நம்ம என்ன கடையா திறக்கிறோம் என்று சொல்லிவிட்டு கிருஷ்ணர கூப்பிட போயிருந்தேன் என்று சொல்லுகிறார். அதற்கு உங்க சொந்தக்காரரா மீனா என்று கேட்க இல்லம்மா கடவுள் கிருஷ்ணர் என்று சொல்லி கிருஷை கூப்பிட அனைவரும் ஆச்சரியமாக பார்க்கின்றனர். அண்ணாமலை கிருஷ்ணரே வந்த மாதிரி இருக்கு வாங்க கிருஷ்ணர் உள்ள என்று கூப்பிடுகிறார். உடனே விஜயா இது உங்கள எல்லாம் கூப்பிட வேணாம்னு சொன்னா இந்த மீனா கேட்கவே மாட்டா என்று திட்டுகிறார். வித்யா மோகினி இடம் இது பையன் அழகா இருப்பாளா என்று சொல்ல ஆமாம் என்று ரோகினி சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து மனோஜ் வந்து அந்த பையனுக்கு கெட்டப் நல்லாவே இல்லை என்று சொல்ல அதெல்லாம் நல்லா தான் இருக்கு நீ போய் உன் வேலையை பாரு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு விஜயா தீபாரதனை காட்ட அனைவரும் சாமி கும்பிடுகின்றனர்.

பிறகு முத்து கிருஷ்ணர் கையாலே அனைவருக்கும் பிரசாதம் கொடுக்கலாம் என்று முடிவு செய்து அண்ணாமலை இடம் முதலில் கொடுக்க அவர் வாங்கிக் கொள்கிறார் பிறகு விஜயாவிடம் கொடுக்க சொல்ல விஜயா அப்புறமா சாப்பிடுகிறேன் என்று வாங்க மறுத்து விடுகிறார். ரோகினி இடம் சென்ற கிருஷ் செல்ல அவரை கட்டிப்பிடித்து கொஞ்சி கண்கலங்குகிறார் ரோகிணி. இதனை அனைவரும் பார்த்துவிட மனோஜ் ஏன் ரோகினி ப்ரோமோ எமோஷனலாக என்று கேட்க இது கூட உனக்கு தெரியாதா ரோகினி வயிற்றில் கரு உண்டாகி கலைஞ்சு போயிடுச்சுல்ல அந்த ஞாபகம் வந்திருக்கும் என்று விஜயா சொல்லுகிறார் ஆமா ஆண்ட்டி என்று சொல்ல அண்ணாமலை உடனே விடுமா அடுத்த கிருஷ்ணரே வந்து போற பாரு என்று சொல்ல வித்யா உடனே இந்த கிருஷ்ணரே இவளோட புள்ள தான் என்று சொல்லி பேசுகிறார்.

கிருஷ்ணரே உட்கார வைத்து முத்து கிருஷ்ணர் பாட்டு பாட சொல்ல மீனா ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ என்ற பாட்டை பாடுகிறார். பாடி முடித்த பின் அனைவரும் கைதட்டுகின்றனர் உடனே முத்து கிருஷ்ணரை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு இங்கு வந்த உடனே இவனுக்கு அவ்வளவு சந்தோஷம் என கிளம்பும்போது கூட இப்படி சந்தோஷப்படல என்று பேசிக் கொண்டிருக்க கிருஷிடம் முத்து நீங்கியே இருக்கியா உன்ன நான் இங்கே ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்கிறேன் என்று முத்து சொல்ல ரோகினி அவங்க அம்மாவிடம் கண்ணை காட்டுகிறார். உடனே ரோகினி அம்மா கோபப்பட்டு நிறுத்துப்பா என்று சத்தம் இடுகிறார்.

நானும் எவ்வளவு தூரம் பொறுமையா இருக்கிறது, அவனை இங்க வர வச்சு ஆசை வார்த்தை காமிச்சு அவன் மனச ஏன் குழப்பறீங்க. அவ ஒன்னும் அனாதை கிடையாது அவனுக்கு பாட்டி நான் இருக்க என் பொண்ணு இருக்கா அம்மான்னு நீங்க எதுக்கு சும்மா தத்து எடுக்குறத பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க. என்று சொல்ல இதுக்கு ஏமா இவ்வளவு கோபப்படுறீங்க என்று அண்ணாமலை கேட்கிறார். இத பத்தி பேசும்போது நான் எதுவும் பேசக்கூடாதுனு தான் அமைதியா இருந்தேன் அப்பயாச்சும் அவங்க புரிஞ்சிருக்க கூடாதா என்று கோபப்படுகிறார். மீனா நாங்க அப்படியெல்லாம் நினைக்கல என்று எவ்வளவு சொல்லியும், ரோகினேன் அம்மா கோபமாக பேசிக்கொண்டே இருக்கிறார்.

ரோகினி அம்மா எடுத்த முடிவு என்ன?அதற்கு முத்து,மீனா என்ன சொல்ல போகிறார்கள்? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.