சிப்பு சூரியன் அடுத்ததாக ஜீ தமிழ் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிய ரோஜா சீரியல் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் சிப்பு சூரியன்.
பல வருடங்கள் ஓடிய இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் ஹீரோவாக நடித்தார். ஆனால் இந்த சீரியலுக்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் விரைவில் கிளைமாக்ஸ் கண்டது.
இப்படியான நிலையில் நான் சிப்பு சூர்யன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சீரியலில் நாயகியாக பேரன்பு சீரியல் புகழ் வைஷ்ணவி நடிக்க உள்ளார் எனவும் இன்னொரு ஹீரோவாக ரஜினி சீரியல் புகழ் அருண் நடிக்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் சிப்பு சூர்யன் இதில் மெயின் ஹீரோவா அல்லது செகண்ட் ஹீரோவா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.