குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் பாலா ஆகியவருடன் இணைந்து ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார் ஸ்ருதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

நேற்று நடந்து முடிந்த கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் ஸ்ருதிகா டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் மற்றும் ப்ரீத்தி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

அது மட்டுமல்லாமல் அவருடைய கோமாளியான புகழுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த கோமாளியான பாலாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

புகழ் தனக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை பாலாவுக்கு வழங்குவதாக அறிவித்தார். பாலா தனக்கு கிடைத்த பணத்தை பெரம்பலூரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் வசிக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

இதனையடுத்து ஸ்ருதிகா தனக்கு கிடைத்த பரிசு பணத்தில் ஒரு லட்சம் ரூபாயை அதை ஆசிரமத்திற்கு வழங்குவதாக அறிவித்தார். புகழ், பாலா மற்றும் ஸ்ருதிகா என மூவரும் செய்த இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.