Shruti HariHaran : நடிகர் அர்ஜுன் மீது மீ டூ புகார் கூறியிருந்த நடிகை ஸ்ருதிஹரிஹரன் இவ்வளவு நாளாக மறைத்து வைத்திருந்த உண்மை அம்பலமாகியுள்ளது.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி ஹரிஹரன். திரையுலகில் பெரும் பரபரப்பாகி வரும் இந்த நேரத்தில் இவர் அர்ஜுன் மீது பாலியல் குற்றசாட்டை கூறி வந்தார்.
இந்நிலையில் தற்போது இவர் போலீசில் அளித்திருந்த புகாரில் தனக்கு திருமணமாகி விட்டது என கணவருடைய பெயரை குறிப்பிட்டு இருந்தார்.
இதுவரை தனக்கு திருமணமாகவில்லை என கூறி வந்த ஸ்ருதி ஹரிஹரனின் வண்டவாளம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனையறிந்த ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பட வாய்ப்புகள் குறைந்து விடுமோ என்பதற்காக தனக்கு திருமணமானத்தையே மறைத்து விட்டீர்கள்.
அப்படி இருக்கும் போது நீங்கள் அர்ஜுன் மீது கூறிய குற்றசாட்டை மட்டும் எப்படி உண்மை என நம்புவது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனால் ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுன் மீது கூறிய குற்றசாட்டு பொய்யாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.