![shrutihaasan_arrahman_290224_2](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/03/shrutihaasan_arrahman_290224_2-696x487.jpg)
ஏ ஆர் ரகுமான் இசையில் சுருதிஹாசன் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் சிவா, பிரியா ஆனந்த் நடித்த ‘வணக்கம் சென்னை’ படம் மூலம் இயக்குநர் ஆனவர் கிருத்திகா உதயநிதி. அடுத்து விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’, ‘பேப்பர் ராக்கெட்’ என்ற வெப்தொடர் ஆகியவற்றை இயக்கினார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/03/shrutihaasan_arrahman_290224_5-1024x768.jpg)
இதைத்தொடர்ந்து தற்போது இவர் ‘காதலிக்க நேரமில்லை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடியாக நடித்துள்ளனர். யோகிபாபு, டி.ஜே.பானு, ஜான் கொக்கைன் உட்பட பலர் நடித்து வர படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
உடல் நிலையில் சினேகனின் வரிகளில் உருவான பாடலை சுருதிஹாசன் பாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக பல படங்களில் பாடியுள்ள ஸ்ருதி ஹாசன் முதல் முறையாக ஏ ஆர் ரகுமானுடன் இணைந்து அவரது இசையில் பாடியுள்ளார்.
இதற்கான ரெக்கார்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.