sembaruthi 01.11.18

Sembaruthi 01.11.18 : அகிலா, மித்ரா தான் இந்த வீட்டின் மூத்த மருமகள் என்று அறிவிக்கிறார். ஆதியும் பார்வதியும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். வனஜா ,ஐஸ்வர்யா, உமா இவர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷப்படுகின்றனர்.

அகிலா, ஆதியிடம் மித்ரா தான் உனக்கு ஏற்ற மனைவி என்று கூறுகிறாள். அதற்கு ஆதி நான் இப்பொழுதே ஒரு டாஸ்க் வைக்கிறேன்.

இந்த கொலு பொம்மைகளில் எனக்கும் அம்மாவுக்கும் பிடித்த ஒரு பொம்மை உள்ளது .அதை கண்டுபிடி என்கிறார்.

மித்ரா தவறாக கண்டுபிடித்து விடுகிறார். உடனே அகிலா நம் இருவரையும் புரிந்து வைத்திருக்கிற பார்வதியே சொல்லட்டும் மித்ரா உனக்கு எவ்வளவு பொருத்தமானவள் என்று கூறுகிறார்.

பார்வதியும் அகிலா கூறிய படியே கூறுகிறார். வனஜா வீட்டிற்கு வரும் மூத்த மருமகளை எப்படியாவது கைக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் என்று தன் மோதிரத்தை பரிசளிக்க செல்கிறாள்.

வனிதா அளிக்கும் மோதிரத்தை மித்ரா வாங்காமல் தன் கழுத்தில் அணிந்திருக்கும் வைர நெக்லசை வனஜாவுக்கு பரிசாக அளிக்கிறார்.

மேலும் ஆதிக் கடவூர்அகிலாண்டேஸ்வரியின் மருமகளுக்கு பரிசு அளிக்க ஒரு தகுதி வேண்டும் என்று கூறி வனஜாவை அசிங்கப்படுத்தி விடுகிறாள் மித்ரா. அகிலா ஆதிக்கு டிசம்பர் 7ம் தேதி திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கிறார்.

இதை கேட்ட பார்வதி துடி துடிக்கிறாள். தன் வீட்டிற்கு வரும் பார்வதி தன் அம்மாவின் படத்தை பார்த்து நான் அதிர்ஷ்டமில்லாதவள் ஏழு வயதில் நீ ,என்னை விட்டு சென்று விட்டாய் ! நானும் உன்னுடன் வந்து விடுகிறேன் என்று தற்கொலைக்கு முயற்சி செய்கிறாள் பார்வதி.

தன் கை நரம்பை கத்தி எடுத்து அறுத்துக் கொள்கிறாள் பார்வதி. நாளைய எபிசோடில் ஆதி அகிலாவிடம் தன் காதலைப் பற்றி கூறுவாரா? தற்கொலைக்கு முயன்ற பார்வதி காப்பாற்றப்படுவாரா?

ஆதி, பார்வதியின் திருமணம் மற்றும் காதலை தெரிந்து கொண்டு மித்ராவே அவர்களை சேர்த்து வைப்பார் எனவும் இதனால் வனஜா அதிர்ச்சியடைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.