Sembaruthi Serial Shocking Update : செம்பருத்தி சீரியலில் இருந்து அத்தி கடவூர் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ப்ரியா ராமன் விலகிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரை ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் ஷபானா நாயகியாக நடிக்க ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து வந்தார். படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்பதன் காரணமாக கார்த்திக் ராஜ் இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். தற்போது அவருக்கு பதிலாக தொகுப்பாளர் அக்னி நடித்து வருகிறார்.
இவர் மட்டுமல்லாமல் இந்த சீரியலில் அகிலாண்டேஸ்வரி இளைய மருமகளாக நடித்து வந்தவர் மாற்றப்பட்டார். அடுத்தடுத்து சில நடிகர்கள் மாற்றப்பட்டனர். இப்படியான நிலையில் ஜெயிலுக்கு சென்று உள்ள அகிலாண்டேஸ்வரியை கடந்த ஒரு மாதமாக காட்டப்படவில்லை. ஒரு சில காட்சிகள் மட்டுமே அவர் காட்டப்பட்டார். இதனால் இந்த சீரியலில் இருந்து அகிலாண்டேஸ்வரியாக நடித்துவரும் பிரியா ராமனும் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.