சன் டிவி சீரியலில் களம் இறங்க உள்ளார் செம்பருத்தி சீரியல் நாயகன்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியைப் பெற்ற சீரியல் செம்பருத்தி.

இந்த சீரியலில் நாயகனாக முதலில் கார்த்திக் ராஜ் நடித்து வந்தார். அதன் பிறகு வெள்ளித்திரையில் நடிக்க இருப்பதன் காரணத்தினால் அவர் இந்த சீரியலில் இருந்து விளக்க அதன் பிறகு பிரபல யூட்யூப் தொகுப்பாளர் அக்னி நாயகனாக ஆதி என்ற நடிக்க தொடங்கினார்.

கார்த்திக் ராஜின் வெளியேற்றத்திற்குப் பிறகு சீரியல் வரவேற்பு மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியதால் ஒரு கட்டத்தில் சீரியலும் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் முடிவு அடைந்ததை தொடர்ந்து அக்னி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் ஒன்றில் நாயகனாக நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

சித்தி 2 சீரியல் புகழ் ப்ரீத்தி ஷர்மா நாயகியாக அக்னியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ள இந்த சீரியலுக்கு வான்மதி என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியல் முடிவை நெருங்கி வருவதால் அந்த சீரியலுக்கு பதில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் எனவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

விரைவில் இந்த சீரியல் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.