Sembaruthi 28.10.18 :
அம்பாளின் முன்னிருக்கும் விளக்கை பார்வதி ஏற்றும்போது அகிலா தடுத்து விடுகிறார்.
அகிலா பார்வதியிடம் விளக்கை நானே ஏற்றுகிறேன் என்று சொல்லிவிடுகிறார். பார்வதி வருத்தத்துடன் அங்கிருந்து கிளம்பி தோட்டத்திற்கு வந்து விடுகிறாள்.
ஆதி பார்வதியை தேடி சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார்.
அப்பொழுது பார்வதி, விளக்கு ஏற்றவே உரிமை இல்லாதப் பொழுது நான் எப்படி உங்கள் வீட்டிற்கு மூத்த மருமகள் ஆக ,அம்மா சம்மதம் தருவார்கள் என்று ஆதியிடம் கூறுகிறாள்.
அதற்கு ஆதி முதலில் நீ வீட்டுக்கு வந்த பொழுது கூட அம்மாவுக்கு உன்னைப் பிடிக்கவில்லை.
பிறகு நீ அம்மா மனதில் இடம் பிடிக்க வில்லையா, அதுபோலதான்’ காலம் மாறும் ‘உன்னை மருமகளாக ஏற்றுக் கொள்வார்கள் என்று சமாதானப்படுத்துகிறார்.
பரம்பரை செயினில் நீங்களும் நானும் ஒன்றாக இருக்கும் இந்த போட்டோ என் கழுத்தில் உள்ளதே எனக்கு போதும் என்று சொல்லியபடியே பரம்பரை செயினில் உள்ள லாக்கெட்டை திறந்து காட்டுகிறார் பார்வதி.
இதை வனஜா பார்த்துவிடுகிறாள். இந்தப் பரம்பரை செயினில் உள்ள லாக்கெட்டில் இருக்கும் ஆதி, பார்வதி போட்டோவை அகிலா பார்த்து விடும்படி செய்தாலே போதும்.
நாம் இந்த வேலைக்காரியை வெளியேற்றி விடலாம் என்று வனஜா திட்டம் தீட்டுகிறாள்.
அம்பாளுக்கு சொர்ணாபிஷேகம் செய்வதற்காக அனைவரின் நகையையும் அகிலா தர சொல்கிறார்.
அப்பொழுது வனஜா மற்ற நகைகளை விட நம் பரம்பரை செயினை அம்பாளுக்கு சாத்தினால் தான் நல்லது என்று கூறி, பார்வதியிடம் இருந்தே நகையை வாங்குகிறாள்.
வனஜா லாக்கெட்டை திறந்தபடி அகிலாவிடம் கொடுத்துவிடுகிறார். பூஜை செய்து அனைவருக்கும் நகைகளைஅகிலாவே தரவேண்டும் என்று வனஜா செல்கிறாள்.
அதன்படியே அகிலாவும் நகைகளை எடுத்து தருகிறாள். இன்றைய எபிசோடில் பரம்பரை செயினில் உள்ள ஆதி, பார்வதியின் போட்டோவை பார்த்து விடுவாளா அகிலா? சவாலில் ஜெயிப்பது வனஜாவா? பார்வதியா? நாளைய பகுதியில் பார்க்கலாம்