Sembaruthi 02.11.18 : ஆதிக்கும் மித்ராவுக்கு திருமணம் என்று அறிவித்தவுடன் பார்வதி தற்கொலைக்கு முயல்கிறாள். தன் கையை கத்தியால் அறுத்துக் கொள்கிறாள் பார்வதி.
இதனை அறியாத சுந்தரம் , பார்வதியிடம் பெரிய அய்யா திருமணத்திற்கு நன்றாக வேலை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.
ஆதி பார்வதியை ,கோவிலில் திருமணத்திற்காக பூஜை செய்ய வேண்டும் .அதற்காக பார்வதியை கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று கூறி பார்வதியை அழைத்து செல்கிறார்.
வனஜா, மித்ரா தன்னை அவமானப்படுத்திய நிகழ்ச்சியை ஐஸ்வர்யாவிடம் கூறுகிறார்.
அகிலா, ஆதிக்கும் மித்ராவுக்கும் பொருத்தம் நன்றாக உள்ளதா?அவர்களின் திருமணம் தடையில்லாமல் நடைபெறுமா என்று குருஜியிடம் ஜாதகம் பார்க்கிறார்.
குருஜி வீட்டில் உள்ளவர்கள் அனைவரின் ஜாதகத்தையும் பார்கிறார்.
அவர் ஜாதகம் பார்க்கும் போது ஆதிக்கும் பார்வதிக்கு மிக சிறப்பாக பொருத்தம் உள்ளதை பார்க்கிறார்.
குருஜி ஜாதகம் பார்க்கும்போது அகிலாவின் கணவர், அகிலா அந்தஸ்தில் சரியான பெண்ணை தான் அதுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளில் உள்ளார் .
ஜாதகத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் என்னிடம் மட்டும் சொல்லுங்கள் என்று கூறுகிறார்.
அகிலா போன் பேசிவிட்டு வந்த பிறகு குரு ஜி ஆதியின் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டுமென்றால் இந்த ஜாதகக்காரர் வீட்டில் திருமணம் நடக்கும் வரை இருக்கக் கூடாது என்கிறார்.
அகிலா, அதிர்ச்சியடைகிறாள்!ஏனென்றால் அந்த ஜாதககாரார் பார்வதி. குருஜி நான் சொல்வதை நம்பவில்லை என்றால் உங்கள் வீட்டில் ஒரு சிவ லிங்கத்தை வைத்து வீட்டில் உள்ள உள்ளவர்களும், வேலை செய்பவர்களும் சிவலிங்கத்தின் மீது திருநீர் அபிஷேகம் செய்த பின்னர் பாலை ஊற்ற வேண்டும்.
அப்படி ஊடற்றும்போது ,யார் ஒருவர் பால் ஊற்றும் போது நீலநிறமாக சிவலிங்கம் மாறுகிறதோ அவரை இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்கிறார்.
ஆனால் குருஜி மனதில் சிரிக்கிறார் .ஏனென்றால் யார் பால் ஊற்றும் போது சிவலிங்கம் நீல நிறமாக மாறுகின்றதோ ?அவர்தான் ஆதியில் மனைவியாக வேண்டும் என்பது பரமேஸ்வரனின் சித்தம் என்று நினைத்துக் கொள்கிறார்.
இன்றைய எபிசோடில்—தற்கொலைக்கு முயன்ற பார்வதி காப்பாற்றப்படுவாரா? குருஜி மனதில் நினைத்த எண்ணம் நிறைவேறுமா ? என்பதை பார்க்கலாம்.