Seeman Speech Against Rajini and Vijay

ரஜினி மற்றும் கமலை அடிக்கிற அடில விஜய் மட்டும் இல்ல இனி எந்த நடிகனும் அரசியலுக்கு வர எண்ணம் ஏற்படக்கூடாது என ஆவேசமாக பேசியுள்ளார் சீமான்.

Seeman Speech Against Rajini and Vijay : தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி என்ற கட்சியின் மூலம் அரசியலில் ஈடுபட்டு வருபவர் சீமான். இவர் நடிகர் மற்றும் இயக்குனரும் கூட என்பது அனைவரும் அறிந்ததே.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் அரசியலுக்கு வருவதை கடுமையாக எதிர்த்து வருகிறார். தமிழனை தமிழன் தான் ஆளவேண்டும் என கூறி வருகிறார்.

இந்த நிலையில் இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தமிழக மீனவர்கள் மீது இலங்கை சிங்களர்கள் கை வைத்தால் தமிழகத்தில் படிக்கும் சிங்கள மாணவர்களை அடிப்போம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராடினார்.

இதனால் சீமான் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ரஜினி கமலை அடிக்கிற அடியில விஜய் மட்டுமல்ல இனி எந்த நடிகனுக்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்படக் கூடாது என பேசியுள்ளார்.

ரஜினியும் கமலும் எம்ஜிஆரை தூக்கிப் பிடிக்கிறார்கள். இதனால் அவர்களின் வாக்குகள் அதிமுகவுக்கு தான் செல்லும். எம்ஜிஆருக்கு எங்கள் அண்ணன் பிரபாகரன் மீது மதிப்பு உண்டு. அதனால் எம்ஜிஆர் மீது எங்களுக்கும் மதிப்பு உண்டு.

ஆனால் எம்ஜிஆர் என்ன செய்துவிட்டார்?? கல்வியையும் மருத்துவத்தையும் தனியாருக்கு கொடுத்தார். முல்லைப் பெரியாறு அணையை கேரளாவுக்கு தாரை வார்த்தார் என பேசியுள்ளார்.

சீமான் விஜய் உள்ளிட்ட எந்த நடிகரும் அரசியலுக்கு வரக்கூடாது என பேசியிருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.