SBI : எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம் இனி மாதத்திற்கு ரூ.20,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற புதிய நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஒருநாளைக்கு அதிகபட்சமாக பணம் எடுக்கும் உச்சவரம்பு ரூ.40,000 ஆக இருந்து வந்தது.
இந்நிலையில், இந்த உச்சவரம்பை ரூ.40,000 லிருந்து ரூ.20,000 ஆக குறைக்க போவதாக எஸ்பிஐ இம்மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், கிளாசிக், மேஸ்ட்ரோ வகை அட்டைகளுக்கான இந்த குறைப்பு, இன்று (அக்.31) முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து எஸ்பிஐ கூறியதாவது, ” மின்னணு பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏடிஎம்-களில் நடைபெறும் பண மோசடிகளை தடுக்கவே, டிஜிட்டல், பணமில்லா பரிவர்த்தனை ஆகியவற்றை ஊக்குவிக்கவும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்தனர்.
SBI வங்கியின் இந்த அறிவிப்பு ஏற்புடையதாக இருந்தாலும் சாதாரண நடுத்தர மக்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றது என கூறி வருகின்றனர்.
மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க எஸ்பிஐ இந்த அறிவிப்பில் மாற்றம் கொண்டு வருமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.