Sathyan
Sathyan : லின்ஸில் நடைபெற்று வரும் ஐடிடிஎப் ஆஸ்திரிய ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில்  காலிறுதியில்  நமது இந்திய வீரர் சத்யன் முன்னேறி உள்ளார்.
உலகின் 35-ஆம் நிலை வீரராக உள்ள சத்தியன் நாக் அவுட் சுற்றில் உலகின் 16-ஆம் நிலை வீரர் மார்கோஸ் உடன் மோதினார்.
கடினமாக விளையாடி சிறந்த வீரராக தன்னை நிரூபித்துள்ளார். அர்புதமாக விளையாடி 4-3 என்ற செட் கணக்கில் வெற்றி அடைந்தார்.
சத்யன் முதல் கேமை 4-11 என்ற கணக்கில் இழந்த போதிலும், அடுத்து அபாரமாக ஆடி 11-9, 11-9, 11-8, 11-6 என்ற கேம் கணக்கில் வென்றார்.
அடுத்து காலிறுதிக்கு உலகின்  இரண்டாம் நிலை வீரர் சீனாவின் ஸீ ஸி ன்னை எதிர்கொள்கிறார் சத்யன் .
வெற்றியை பற்றி சத்யன் கூறியது :
மார்கோஸ்யை  வெற்றி பெற்றது மிக பெரிய வெற்றி எனக்கு. இந்த ஆட்டம் எனது ஆட்டம் திருப்திகரமாக உள்ளது. மேலும் இந்த ஆட்டத்தில் என்னால் முடிந்த வரை போராடி சிறந்த ஆட்டத்தை வெளிக்காட்டினேன். அதன் காரணத்தினாலே இந்த வெற்றி சாத்தியம்  ஆயிற்று. மேலும் அடுத்த ஆட்டத்தில் இன்னும் சிறப்பாக விளையாட  கடும் பயிற்சி எடுத்து வெற்றி பெற முயல்வேன் என்று கூறினார்.
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.