Sarkar Next Issue : தளபதி விஜயின் சர்கார் படத்திற்கு மீண்டும் ஒரு புது சிக்கல் ஏற்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார். முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வரலட்சுமி சரத்குமார் வில்லியாகவும் ராதா ரவி, பழ.கருப்பையா ஆகியோர் வில்லன்களாகவும் நடித்துள்ளனர்.
மேலும் இப்படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெற்று தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் எழுத்தாளர் வருண் ராஜேந்தர் என்பவர் சர்கார் கதை என்னுடையது என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நீதி மன்றம் வரும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நீதி மன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் தற்போது அடுத்த அதிர்ச்சியாக கத்தி படத்தின் கதை என்னுடையது.
நான் இயக்கி இருந்த தாகபூமி என்ற குறும்படத்தை வைத்து முருகதாஸிடம் உதவி இயக்குனராக சேர்த்து கொள்ளுமாறு அணுகி இருந்தேன்.
அதன் பின்னர் அவர் இந்த குறும்படத்தின் தகவல்களை கேட்டிருந்தார்.
நானும் அவருக்கு இ-மெயில் மூலமாக அனுப்பி இருந்தேன். ஆனால் அதன் பின்னர் முருகதாஸிடம் இருந்து எந்தவித பதிலும் வெளியாகவில்லை.
என்னுடைய எவ்வித அனுமதியும் இல்லாமல் தாக பூமி கதையை வைத்து கத்தி படத்தை இயக்கி இருந்தார். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து இருந்தும் எந்தவித பயனும் இல்லை என கூறியுள்ளார்.
இதனால் இன்று காலை சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் அவர்களை சந்தித்து புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கதையை திருடி படம் இயக்கிய முருகாதாசின் சர்கார் படம் உட்பட இதுவரை வெளியான வெளியான அனைத்து படங்களை தடை செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.
அந்த குறும்பட இயக்குனரின் அறிக்கை இதோ