![images (85)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/02/images-85-4.jpeg)
நடிகை சமந்தா கைகளில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
இந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் யசோதா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சகுந்தலம் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது மயோசைட்டிஸ் நோயிலிருந்து மீண்டு வரும் சமந்தா பழையபடி உத்வேகமாக தனது பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/02/images-91-3.jpeg)
அந்த வகையில் அவர் தற்போது சிட்டாடல் என்னும் வெத்தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பின் போது அவரது கைகளில் ஏற்பட்டிருக்கும் காயங்களின் புகைப்படத்தை பதிவிட்டு அதில் ஆக்ஷன் காட்சியால் கிடைத்த பரிசு எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் சமந்தாவை பாராட்டி அப்புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/02/IMG_20230228_145124-1024x1024.jpg)