![Sai pallavi Sai pallavi](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2019/01/Sai-pallavi-696x464.jpg)
Sai Pallavi Decision : தன்னுடைய நடிப்பில் வெளியான படம் படுதோல்வி அடைந்ததால் சாய் பல்லவி எடுத்துள்ள முடிவு பலரையும் வியக்க வைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் வெற்றி நாயகியாக வலம் வரத் தொடங்கியுள்ளார் சாய் பல்லவி.
இவர் சமீபத்தில் தமிழில் தனுஷுடன் சேர்ந்து மாரி 2 படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருந்தது.
மேலும் அதே தினத்தில் தெலுங்குவில் சாய் பல்லவி நடித்திருந்த படி படி லிசே மனசு என்ற படமும் வெளியாகி இருந்தது.
ஆனால் இப்படம் எதிர்பாராத தோல்வியை சந்தித்ததால் தயாரிப்பாளருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் அவர் சாய் பல்லவி கொடுக்க வேண்டிய பாக்கி சம்பளம் ரூ 40 லட்சத்தை கொடுக்க முன் வந்துள்ளார்.
ஆனால் சாய் பல்லவி படத்தின் தோல்வியில் தானும் பங்கேற்று கொள்வதாக அந்த பணத்தை வாங்க மறுத்துள்ளார்.
அப்போதும் தயாரிப்பாளர் அடுத்த கட்டமாக அந்த பணத்தை சாய் பல்லவியின் பெற்றோர்களிடம் கொடுக்க முயன்றுள்ளார். அவர்களும் வாங்க மறுத்துள்ளனர்.
இது குறித்து அந்த தயாரிப்பாளர் திரையுலகில் இப்படியான சில நல்ல மனிதர்களும் உள்ளார்கள் என்பதற்கு சாய் பல்லவி தான் எடுத்துக்காட்டு.
அவர் சினிமாவில் No 1 நடிகையாக வலம் வர வேண்டும் என தன்னுடைய வாழ்த்தி தன்னுடைய நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.