SA ChandraSekar : இளையராஜா விவாகரத்தில் பி.டி செல்வகுமாரின் கருத்துக்கு ஆதரவாக எஸ்.ஏ.சி இளையராஜா விவகாரம் குறித்து பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி செல்வகுமார் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து இளையராஜா விவகாரம் குறித்து பேசி இருந்தார்.
இளையராஜாவின் பாடல் ராயல்டி தொகை தயாரிப்பாளர்களுக்கு தான் சேர வேண்டும். இந்த தொகையால் தயாரிப்பாளர்கள் ரூ 200 கோடிக்கும் மேல் ஏமார்ந்துள்ளனர் என பேசி இருந்தார்.
இதனையடுத்து தற்போது இளையராஜாவின் பாடல் ராயல்டி தயாரிப்பாளர்களுக்கு தான் சேர வேண்டும் என விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.
நேற்று குமரிமாவட்டம் அரு மனையில் கிறிஸ்மஸ் மத நல்லிணக்க விழா நடைபெற்றது.
அதில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசிய போது இளையராஜாவின் பாடல் ராயல்டி பற்றி நிருபர்கள் கேட்டபோது எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியதாவது,
ஒரு கட்டடம் கட்டும் பொது என்ஜினீயர், மேஸ்த்ரி , கொத்தனார், கையாள், கார்பெண்டர், பெயிண்டர், என பலரும் சேர்ந்து தான் ஓர் வீட்டை உருவாக்குவார்கள்.
அந்த வீட்டு வேலை முடிந்தவுடன் அந்த வீட்டின் உரிமையாளருக்கு அந்த உரிமை சேருமே தவிர மற்ற யாரும் அந்த உரிமை கொண்டாட முடியாது. இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும்.
அதே போல் தான் ஒரு படம் தயாரிப்பது என்பது கடினமான தொழில், வீட்டை விற்று, நிலத்தை விற்று, பல அவமானங்களை சந்தித்து தான் படங்களை தயாரிக்கிறார்கள்.
இதில் துரதிஷ்டம் என்னவென்றால் அதிக சதவிகித படங்கள் தோல்வி அடைந்து விடுகிறது.
அத்தனை இன்னல்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கு தான் அந்த உரிமை சென்றடைய வேண்டும்.
ஒரு படத்தில் பணிபுரியும் இயக்குனர், ஒளிப்பதிவாளர், சண்டை இயக்குனர், கலை இயக்குனர், நடிகர், நடிகைகள், எல்லோரும் சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்கிறார்கள். இவர்கள் யாருமே ராயல்டி கேட்பதில்லை.
அதை போல தான் இசையமைப்பாளரும் கேட்பது தவறு. அவருடைய வேலைக்கு என்ன சம்பளமோ அதை வாங்கி விடுகின்றனர். எனவே அந்த பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும்.
எனவே தயாரிப்பாளர்கள் இந்த ராயல்டியை பெற ஓற்றுமையுடன் செயல்பட வேண்டும் என எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.