Sabari Mala Cause

சபரிமலையில் பெண்கள் செல்ல பெரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது, ஆந்திர பெண் பத்திரிக்கையாளர் உட்பட 2பெண்கள் சபரிமலை சன்னிதானத்திதை நெருங்கினர். பெண்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சபரிமலை சன்னிதானத்திதை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. பெண் பத்திரிக்கையாளர் உடன் வந்த பெண்ணையும் திருப்பி அனுப்ப உத்தரவிட்ட தேவசம் போர்டு அமைச்சர் சுரேந்திரன், ” பெண் பக்தர்களை தவிர, சமூக செயற்பாட்டாளர்களுக்கு சபரிமலையில் இடமில்லை. போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்த சபரிமலை இடமில்லை” என தெரிவித்தார்.

மேலும், “கேரள அரசின் நோக்கம் பெண் பக்தர்களின் உரிமைகளை பாதுகாப்பதே தவிர போராட்ட எண்ணமுடையவர்களை அனுமதிப்பதில்லை. அந்த 2 பெண்களுள் ஒருவர் போராட்ட எண்ணமுடையவர், இன்னொருவர் செய்தியாளர். இது லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை பாதிக்கும் ” என்றும் தேவசம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் கூறினார்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.