SabariMalai : கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஐயப்பன் கோயிலுக்கு 10-50 வயது பெண்கள் செல்லலாம் என்று கூறி, உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்பிற்க்கு சில மகளிர் அமைப்புகள் வரவேற்றன. ஆனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை நிறைவேற்றுவோம் என்று கேரள அரசு கூறி வருகிறது.
ஆனால் பெண்கள் கோவிலுக்குள் செல்ல, ஐயப்ப பக்தர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அனுமதிக்கவில்லை.
மேலும் சில அமைப்பினர், இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யுமாறு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் முடிவு குறித்து கேரள முதல்வர் பினராயி நிருபர்களிடம் கூறியதாவது,
கடந்த 28 ஆம் தேதி பிறபித்த உத்தரவிற்கு இடைக்கால தடை எதும் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் தெளிவாக கூறியிருக்கிறது.
இருப்பினும் மண்டல மகர விளக்கு சமயத்தில் எல்லா வயது பெண்களையும் அனுமதிப்பது குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளனர் என்று கூறினார்.
ஐயப்பனின் ஆசியாலும், பக்தர்களின் பிராத்தனையாலும் இந்த திருப்பம் ஏற்பட்டது என்று ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.