பணத்துக்காக நடிகைகள் அட்ஜெஸ்ட் செய்வதாக ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார் ரேகா நாயர். இவர் தொகுப்பாளியாகவும் யூ ட்யூப் சேனல் ஒன்றில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
பார்த்திபன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இரவில் நிழல் படத்தில் நிர்வாணமான காட்சி ஒன்றில் நடித்திருப்பார். இவரது இந்த நடிப்பை பயில்வான் ரங்கநாதன் மோசமாக விமர்சித்த நிலையில் அவர் இறக்கும் நாளை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவேன் என தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது இவர் அளித்துள்ள பேட்டியில் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து கேட்டதற்கு சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு, நடிகைகள் நல்ல பிரபலமாக வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், வீடு வாங்க வேண்டும் என ஆசைப்பட்டு அட்ஜெஸ்ட் செய்கிறார்கள்.
இவர்களாக வெளியே சொல்லாமல் எதுவும் வெளியே தெரியாது என்பதால் இப்படியெல்லாம் செய்கிறார்கள். ஆனால் நான் என் வாழ்க்கையில் குடிக்க கூடாது, கண்ட நாய்களோடு படுக்க கூடாது என கட்டுபாடுகளுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.