
அஜித் அழைத்தும் விஷ்ணு வரதன் வராததற்கு காரணம் என்ன என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் துணிவு. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருந்த படத்தில் நடிக்க இருந்தார்.

ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலக்க பட அவருக்கு பதிலாக விஷ்ணுவரதன் இந்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றது. ஆனாலும் இந்த கூட்டணி அமையாமல் போனது. இதனால் அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்த நிலையில் விஷ்ணு வரதன் அஜித் அழைத்தும் வர முடியாத காரணம் என்ன என தெரியவந்துள்ளது. தற்போது சல்மான் கான் உறவினர் ஒருவரை வைத்து படம் இயக்க கமிட்டாகி இருக்கும் காரணத்தினால் அந்த படத்தை விட்டு அஜித் படத்தை இயக்க வர முடியவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதே சமயம் விரைவில் அஜித், விஷ்ணு வரதன் கூட்டணி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.