![images - 2024-01-03T081907.134](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/images-2024-01-03T081907.134-696x391.webp)
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ரவீனா மற்றும் நிக்சன் இருவரும் தங்களது முதல் பதிவை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் போட்டியாளர்களாக பங்கேற்று கடந்த வாரம் வெளியேறியவர்கள் ரவீனா மற்றும் நிக்சன்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/images-2024-01-03T082027.725-jpeg.webp)
91 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு நன்றி முதல் பதிவை வெளியிட்டுள்ளனர்.
ரவீனா தன்னுடைய பதிவில் தனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது என்னுடைய வாழ்க்கைக்கான ஒரு எக்ஸ்பிரிமெண்ட் என தெரிவித்துள்ளார். என்னுடைய வீட்டில் இருப்பது போலவே உணர்வை ஏற்படுத்திய சக போட்டியாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறி உள்ளார். விஜய் டிவி கமல் சார் தயாரிப்பு நிறுவனம் என எல்லாவற்றிற்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் உங்களது விமர்சனங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து நிக்சன் வெளில என்னை பிடிச்சவங்க இவ்வளவு பேர் இருக்காங்கன்னு எனக்கு தெரியாம போயிடுச்சு. தெரிந்திருந்தால் இன்னும் Effort போட்டிருப்பேன். Sorry.
நான் இந்த வீட்டுக்குள்ள கப்ப ஜெயிக்கணும்னு போகல என்ன நல்லவனா காட்டணும்னு போகல நான் யார் என்பதை மக்களுக்கு காட்டணும் என்பதற்காக தான் சென்றேன். நல்ல விஷயங்களை ஏத்துகிறேன் கெட்ட விஷயங்களை மாத்திக்கிறேன்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/images-86-1.jpeg)
உங்க எல்லாருக்கும் வார்த்தையால நன்றி சொன்னா பத்தாது செயல்ல செய்து காட்டுகிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால் நிக்சனின் இந்த பதிவை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் அவரை விமர்சனம் செய்து திட்டி தான் வருகின்றனர்.