Rangaraj Pandey With AJith

AK 59 Rangaraj Pandey : தல அஜித்துடன் நடிக்க ஒப்பு கொண்டதற்கான காரணம் என்ன என்பதை ரங்கராஜ் பாண்டே அளித்த பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படத்தை அடுத்து போனி கபூர் தயாரிக்க உள்ள பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார். தீரன் பட இயக்குனர் எச். வினோத் இப்படத்தை இயக்க உள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிக்க நஸ்ரியா, ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் கமிட்டாகியுள்ளனர்.

இந்த படத்தில் மூலம் ரங்கராஜ் பாண்டே முதல் முறையாக நடிக்க உள்ளார். இது குறித்து அவரிடம் பேட்டி ஒன்றில் கேட்டதற்கு இயக்குனர் வினோத் என்னுடைய நண்பர்.

அவர் என்னிடம் இப்படத்தில் நடிக்க முடியுமா என கேட்டு கொண்டார். அவரால் தான் நடிக்க ஒப்பு கொண்டேன் எனவும் கூறியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஜனவரியில் தொடங்க உள்ளது. படம் மே 1 அஜித் பிறந்த நாளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.