பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வனிதா வெளியேற என்ன காரணம் என்பது குறித்து ரம்யா கிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
Ramya Krishnan About Vanitha Issue : தமிழ்ச் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் ஜோடிகள். இந்த நிகழ்ச்சியில் நடுவராக நடிகர் நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து நான்காவது சீசன் வரை பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் இதில் போட்டியாளர்களாக பங்கேற்று நடனம் ஆடி வருகின்றனர். வனிதா விஜயகுமார் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி தாத்தா ஆகியோர் ஜோடி போட்டு நடனம் ஆடி வந்தனர்.
இந்த நிலையில் தன்னை ஆண்கள், பெண்கள் என இருவரும் செட்டில் தரக் குறைவாக நடத்துவதாக என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் என்னை அழிக்க பார்க்கிறார்கள் என குற்றம்சாட்டி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து வனிதாவின் வெளியேற்றத்திற்கு ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என கூறப்பட்டு வந்தது.
ஒருமுறை ரம்யா கிருஷ்ணன் வனிதாவுக்கு 10-க்கு ஒரு மதிப்பெண் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால்தான் வனிதா பொங்கி எழுந்து இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார் என தகவல் வெளியானது. இது குறித்து பிரபல பத்திரிக்கை ரம்யா கிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசியுள்ளது.
என்னைக் கேட்டால் இதெல்லாம் சாதாரண பிரச்சனை. செட்டில் என்ன நடந்தது என்பதை வனிதாவிடம் கேளுங்கள். என்னிடம் கருத்துக் கேட்டால் நான் நோ கமெண்ட்ஸ் என்றுதான் சொல்லுவேன் என பதிலளித்தார்.
இணையத்தில் வைரலாகும் Bigg Boss Shivani-யின் நடன வீடியோ!