கல்யாணத்துக்கு பிறகு கவர்ச்சி காட்டக் கூடாதா என்ன விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார் ரகுல் பிரீத் சிங்.
இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் தமிழில் நடிகர் கார்த்தி, சூர்யா, மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் தயாரிப்பாளர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் ரகுல் ப்ரீத் சிங் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் கல்யாணத்துக்கு பிறகு இந்த கவர்ச்சி தேவையா என பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் ரகுல் ப்ரீத் சிங் திருமணத்திற்கு பிறகு ஆண்கள் இப்படித்தான் ஆடை அணிய வேண்டும் என ஏதாவது கட்டுப்பாடு இருக்கா? அப்படி இருக்கையில் பெண்களுக்கு மட்டும் ஏன் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பி உள்ளார். பெண்கள் மட்டும் ஏன் திருமணத்திற்கு பிறகு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் எனவும் கேட்டுள்ளார்.