ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்து விடு திரும்பி உள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக உள்ளது.
ஆனால் திடீரென்று அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதில் அவருக்கு இதயத்தில் இருந்து வரும் ரத்தக்குழாயில் பெரிய வீக்கம் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டிருந்தார்.
தற்போது அவர் வீடு திரும்பி உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், நான் மருத்துவமனையில் இருக்கும்போது நான் சீக்கிரம் உடல்நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும் நல விரும்பிகளுக்கும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் நான் நலம் பெற பிரார்த்தனைகள் செய்த மனதார வாழ்த்திய என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும் அனைத்து மக்களுக்கும் எனது உளமாற மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.