நடிகர் ரஜினிகாந்தின் 170 ஆவது படத்தை இயக்கப் போகும் இயக்குனர் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் தனது 169 வது படத்தை நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரவபூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

தற்போது இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 170” ஆவது படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க போவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.