வேற லெவல் அதிரடிக்கு தயாராகி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து வசூல் வேட்டையாடி வரும் இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் உருவாக உள்ள தலைவர் 170 படத்தில் நடிக்க உள்ளார்.
ஜெய் பீம் படத்தில் இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ள நிலையில் படத்திற்கு டைட்டிலாக நான்கு பெயர்கள் அடிபட்டு வருகிறது.
அதாவது வேட்டையன், சோகரிகன், மிருகசீவனன், ரகுபதி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை டைட்டிலாக வைக்கலாம் என்று படக்குழு ஆலோசனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நான்கு டைட்டிலில் உங்களது சாய்ஸ் எது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.