பரியேறும் பெருமாள்: இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
திரைத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள் , விமர்சகர்கள், ஊடகங்கள் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துள்ளார்.
அதன் பின்னர் தயாரிப்பாளர் இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு ஒரு நாவலைப்போல திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்.
பல இடங்களில் நான் சிலிர்த்துவிட்டேன், மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் வாழ்த்துக்கள் படக்குழுவினருக்கு” என்று தனது பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.
#பரியேறும்பெருமாள் குறித்து????????????சூப்பர்ஸ்டார் @rajinikanth தங்களின் சமூக அக்கறை சார்ந்த பார்வையும், கனிவு நிறைந்த அன்பும், உணர்ச்சி மிகுந்த பாராட்டும், பெரும் உற்சாகத்தை அளிக்கின்றது!!! @officialneelam சார்பாக பெரும் நன்றியும்!! பெரும் மகிழ்ச்சியும்!!????????????????????????
— pa.ranjith (@beemji) October 23, 2018
பெரும் மகிழ்ச்சியில் இதயத்தை நிரப்பிய சூப்பர் ஸடார் அவர்களுக்கு நன்றி@officialneelam @beemji @Music_Santhosh @pariyankaruppi @rajinikanth pic.twitter.com/F9M3cz5yeG
— Mari Selvaraj (@mari_selvaraj) October 23, 2018