போட்டியில் ஏமாற்றி பைனலுக்கு சென்ற சரவணன் கடைசியில் நடுவர்களிடம் அசிங்கப்பட்டு உள்ளார்.
Raja Rani2 Episode Update 29.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் பைனலுக்கு செல்லும் போட்டியில் சிக்கன் என சொல்லி வேறொரு பொருளை சமைத்து நடுவர்களிடம் கொண்டு சென்று கொடுக்கிறார். சரவணன் சமைத்து சாப்பிட்டு பார்த்த நடுவர்கள் வேற லெவல் என கூறி அவரை பாராட்டுகின்றனர். சரவணன் அப்போதைய இது சிக்கன் இல்லை என சொல்ல முயற்சி செய்தும் நடுவர்கள் அவரை பேச விடவே இல்லை. மேலும் பைனலுக்கு செல்லும் முதல் போட்டியாளர் சரவணன் எனவும் மேடையில் அறிவித்துவிட்டனர்.
அதன் பிறகு மேலும் இரண்டு போட்டியாளர்களை நடுவர்கள் அறிவித்துவிட்டனர். இதுபற்றி தொகுப்பாளர் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் ஒரு நிமிஷம் என சரவணன் மைக்கை வாங்கி நடுவர்கள் இடம் நான் சமைத்ததை சிக்கன் செங்கோட்டை. ஆனால் அதில் இருந்தது உண்மையான சிக்கன் இல்லை என கூறுகிறார். நடுவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். ஆனாலும் அதில் இருந்தது சிக்கன் இல்லை சிக்கன் மாதிரியான ஒரு பொருள். அது பேரு கூட மாவ்மில்டன் என சொல்கிறார். உடனே கோபமான நடுவர்கள் இது மிகப்பெரிய போட்டி இந்த போட்டியில் இந்த போட்டியில் இப்படி ஒரு ஏமாற்று வேலை செய்திருக்கிறீர்கள். இங்க இருக்காங்க எல்லாரும் முட்டாள் என்று நினைத்தீர்களா என கூறுகின்றனர்.
இப்போது போட்டியில் இருந்து விலகுமாறு சொல்கின்றனர். ஷல்மாவும் நடுவர்களுடன் சேர்ந்து சரவணனையும் சந்தியாவையும் விட்டு வெளியேறிப் போகுமாறு கூறுகிறார். அங்கு கூடியிருந்த ஆடியன்சை அவர்களை வெளியேற்றுமாறு கூச்சலிடத் தொடங்கினார். மேடைக்கு வந்த சந்தியா ஒரே ஒரு நிமிஷம் நான் பேசுறத கொஞ்சம் கேளுங்க என கெஞ்சி கேட்கிறார். இதனால் போட்டி நடக்கும் இடத்தில் பரபரப்பு நிலவ இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.